மெல்பர்ன்: இணையப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக சிங்டெல்லின் ஆப்டஸ் நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய அரசாங்கம் தனது கோபத்தைக் காட்டியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் ஆப்டஸ் நிறுவனம் அந்நாட்டின் ஆகப்பெரிய இரண்டாவது தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.
அந்த நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு விதிமீறல்கள் காரணமாக நாட்டின் பத்து மில்லியன் பேர், அதாவது 40 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சிங்டெல்லுக்குச் சொந்தமான ஆப்டஸ் நிறுவனத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாகச் சாடியிருக்கிறது.
நாட்டில் இதுவரை இல்லாத இணையப் பாதுகாப்பு மீறலில் 10,200 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன. அவர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
"பொதுவாக இதுபோன்ற விவகாரங்களில் அரசாங்கம் தலையிடாது. ஆனால் ஆப்டஸ் அதனைச் செய்ய வைத்துவிட்டது," என்று உள்துறை அமைச்சர் கிளாரா ஓநியல் தெரிவித்தார்.
மெல்பர்னிலிருந்து ஒளியேற்றப்பட்ட தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியில் பேசிய அவர், நிதி நெருக்கடி குற்றச்செயல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆஸ்திரேலியர்களும் முன் னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்," என்றார்.
இதற்கிடையே இணையத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எந்த வாடிக்கையாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல் படுவதாக நேற்று ஆப்டஸ் கூறியது. வாடிக்கையாளர்களுக்கு ஏற் படும் பாதிப்பை குறைப்பதற்காக அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆக்ககரமாக செயல்பட்டு வருகிறோம் என்று மின் அஞ்சல் வழியாக ஆப்டஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.