தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரொஹிங்யா அகதிகள் படகு மூழ்கியது, மூவர் மரணம்

1 mins read
f3d1d7bb-878b-4e66-93cf-f5df23001f9c
ரொஹிங்யா அகதிகள் இருந்த படகு மூழ்கியதால் உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

கோக்­சஸ் பஸார் (பங்­ளா­தேஷ்): ரொஹிங்யா அக­தி­கள் இருந்த படகு ஒன்று மூழ்­கி­ய­தில் குறைந்­தது மூவர் மாண்­ட­னர், சுமார் 20 பேரைக் காண­வில்லை. நேற்று பங்­ளா­தே­ஷுக்கு அருகே உள்ள கடற்­ப­கு­தி­யில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்தது.

பரு­வ­நிலை மோச­மாக இருந்­த­தால் படகு மூழ்­கி­ய­தாக அதி­காரி­கள் தெரி­வித்­த­னர். கடற்­கரை நக­ரான ஹல்­பு­னி­யா­வில் குறைந்­தது மூவ­ரின் உடல்­கள் கரைக்­குத் தள்­ளப்­பட்­ட­தா­கக் காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

மாண்ட மூவ­ரும் 18லிருந்து 20 வய­துக்கு உட்­பட்ட பெண்­கள் என்று காவல்­துறை தெரி­வித்­தது.