பிலிப்பீன்சில் $5.7மி ‘லாட்டரி’ பரிசை 433 பேர் பகிர்ந்துகொண்டனர்

பிலிப்பீன்சில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற ‘லாட்டரி’ குலுக்கலில் 433 பேர் பரிசுத் தொகையை வென்றனர்.

ஆனால், வெற்றி எண்களான 09, 18, 27, 36, 45, 54 ஆகியவை சொல்லி வைத்ததுபோல ஒன்பதின் மடங்குகளாக வந்திருப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், இதே எண் வரிசையை 433 பேர் எப்படி தேர்வு செய்திருக்க முடியும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏறக்குறைய US$4 மில்லியன் (S$5.7மி.) பரிசுத் தொகையை வழங்கிய அரசாங்கத்துக்குச் சொந்தமான லாட்டரி நிறுவனம் மோசடி செய்ததாக பிலிப்பீன்ஸ் மக்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், குற்றச்சாட்டை ஏற்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

லாட்டரி நேர்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய இந்தக் குலுக்கல் முறையை தாங்கள் விசாரிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

433 பேர் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருப்பது கணித ரீதியாக சாத்தியமாற்றது என்பதைப் புள்ளியியல் நிபுணர்கள் சுட்டினர்.

இந்நிலையில், குலுக்கலில் வென்ற அந்த 433 பேரில் ஒவ்வொருக்கும் குறைந்தது 545,000 பெசோ (S$13,200) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பிலிப்பீன்சில் வருடாந்திர தனிநபர் வருமானத்தைவிட இருமடங்கிற்கும் அதிகமாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!