லண்டன்: இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் சார்லஸ்சின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8ம் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார்.
மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படும் அவர் கடந்த மாதம் அரியணை ஏறினார்.
இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற அறியப்படுகிறது.
இதன்மூலம் இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதானவர் ஆகிறார் மூன்றாம் சார்ல்ஸ்.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார்.இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.
அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது. ஏற்கெனவே, மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

