தெஹ்ரான்: தலையங்கி அணியாத காரணத்துக்காகத் தடுத்து வைக்கப்பட்டு பிறகு உயிரிழந்த மாஹ்சா அமினி எனும் 22 வயது இளம் பெண்ணுக்கு நியாயம் கேட்டு ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரை குறைந்தது 185 பேர் மாண்டுவிட்டதாகவும் அவர்களில் குறைந்தது 19 சிறுவர்கள் அடங்குவர் என்றும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மாண்டதாக
ஈரானிய ஊடகம் தெரிவித்தது.
அவர்களில் ஒருவருக்குத் தலையில் மிகக் கடுமையான காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரைத் தாக்கியதாக அறியப்படுகிறது. இதுவரை குறைந்தது 14 பாதுகாப்பு அதிகாரிகள் மாண்டுவிட்டனர்.

