நா கிலாங்: தாய்லாந்தின் பாலர் பள்ளி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மாண்டோரின் உடல்களை எரிக்க அவர்களின் குடும்பத்தாரும் அன்புக்குரியவர்களும் நேற்று திரண்டனர்.
வடகிழக்கு தாய்லாந்தில் இருக்கும் நா கிலாங் மாநிலத்தில் நிகழ்ந்த அந்தத் துயரச் சம்பவத்தில் 24 சிறுவர்கள் உட்பட 36 பேர் மாண்டனர். கடந்த சனிக்கிழமையன்று தொடங்கிய மூன்று நாள் இறுதிச் சடங்குகள் நேற்று நிறைவடைந்தன.
பொதுவாக மாண்டோரின் உடல்களைத் தனித்தனியாக எரிப்பதுதான் வழக்கம். ஆனால் அதிகமானோர் உயிரிழந்ததால் நா கிலாங்கில் உள்ள சில பெளத்த ஆலயங்களில் உடல்கள் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டன.
தாய்லாந்து மன்னர் மாளிகை அமைப்பின் செலவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

