'பிரசாரம் செய்ய நஜிப் விடுவிக்கப்படமாட்டார்'

'பிரசாரம் செய்ய நஜிப் விடுவிக்கப்படமாட்டார்'

1 mins read
6e9f30e6-0c55-4ba4-b89e-5ea594be290f
-

காஜாங்: அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலுக்காகப் பிராசரம் செ முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­ட­மாட்­டார் என்று அந்­நாட்டின் சிறைச்­சா­லைப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. திரு நஜிப் சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்­றும்­போது அவ­ரும் சிறைச்­சாலை சட்­டங்­க­ளுக்­கும் விதி­மு­றை­க­ளுக்­கும் உட்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சிறைச்­சா­லைப் பிரி­வின் தலைமை இயக்­கு­நர் நோர்­டின் முகம்­மது குறிப்­பிட்­ட­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

69 வயது திரு நஜிப் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று 1எம்டிபி விவகாரத்தில் தமக்கு விதிக்­கப்­பட்ட 12 ஆண்டு சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்­கி­னார்.