ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இவ்வாண்டு இதுவரை மோசமான சிறுநீரகப் பிரச்சினைக்கு ஆளான 20க்கும் அதிகமான சிறுவர்கள் மாண்டுவிட்டனர். சிறுநீரகப் பிரச்சினைக்கான காரணத்தை அறிய இந்தோனீசியா விசாரணை நடத்தவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 'மெய்டன்' மருந்து நிறுவனத்தின் நான்கு மருந்து வகைகளை உட்கொண்டதால் கேம்பியாவில் சுமார் 70 சிறுவர்கள் இப்பிரச்சினைக்கு ஆளாகி மாண்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து இந்தோனீசியாவில் இந்நிலை உருவாகியுள்ளது.
எனினும், கேம்பியா விவகாரத்துக்கும் இந்தப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்று இந்தோனீசியா கூறியுள்ளது. போதைக் கலப்பினால் மோசமான சிறுநீரகப் பிரச்சினை உருவாகியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக இந்தோனீசிய சுகாதார அமைச்சு கூறியது.

