பெக்கான் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நஜிப்பின் பெயர்

பெக்கான் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நஜிப்பின் பெயர்

1 mins read
109ccbe2-c300-4fdd-9e95-65314b8e959e
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லை­யொட்டி பாஹாங் மாநி­லத்­தின் பெக்­கான் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் போட்டியிட ஐந்து பேர் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளனர்.

அந்­தப் பட்­டி­ய­லில் முன்­னாள் மலே­சி­யப் பிர­த­ம­ரும் 1எம்­டிபி மோசடி வழக்­கில் குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு காஜாங் சிறை­யில் 12 ஆண்டு சிறைத் தண்­டனை அனு­ப­வித்­து­வ­ரும் நஜிப் ரசாக்­கின் பெய­ரும் இடம்­பெற இருக்­கிறது என்று அம்­னோ­வின் பெக்­கான் பிரிவு துணைத் தலை­வர் ஸாம்ரி ராம்லி தெரி­வித்­துள்­ளார்.

மற்ற நால்­வ­ரின் பெயர்­களை வெளி­யிட அவர் மறுத்­து­விட்­டார்.

1982க்கும் 1986க்கும் இடைப்­பட்ட காலத்­தைத் தவிர்த்து பெக்­கான் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக 1976ஆம் ஆண்­டி­லி­ருந்து நஜிப் பதவி வகித்து வரு­வ­தாக அவர் கூறி­னார். 1982-1986 கால­கட்­டத்­தில் பாஹாங்­கின் முதல்­வ­ராக நஜிப் பதவி வகித்­தார்.

"பெக்­கான் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யிட நஜிப்­பின் பிள்­ளை­க­ளுக்­குத் தகுதி இருந்­தும் அவர்­களை அங்கு போட்­டி­யிட வைப்­ப­தற்கு எவ்­வித திட்­ட­மும் இல்லை.

"பெக்­கா­னில் போட்­டி­யிட யார் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டா­லும் நஜிப்­புக்­குப் பொது மன்­னிப்பு கிடைத்­தால் அத்­தொ­கு­தியை அவ­ரி­டமே திருப்­பிக் கொடுத்­து­விட வேண்­டும்," என்­றார் திரு ஸாம்ரி.

மலே­சிய மாமன்­ன­ரி­ட­மி­ருந்து பொது மன்­னிப்பு கேட்டு விடுதலை பெற நஜிப் விண்­ணப்­பம் செய்­துள்­ளார்.

அந்த விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளது.