பாகிஸ்தானில் வெள்ளத்திலிருந்து தப்பித்து தீயில் கருகி மாண்ட 18 பேர்

பாகிஸ்தானில் வெள்ளத்திலிருந்து தப்பித்து தீயில் கருகி மாண்ட 18 பேர்

1 mins read
85bfb53f-8c03-4aec-807e-46070184cd3f
தீக்கு இரையாகிய பேருந்து. குறைந்தது 18 பயணிகள் மடிந்தனர். படம்: ஏஎஃப்பி -

கராச்சி: பாகிஸ்­தானை அண்­மை­யில் வெள்­ளம் புரட்டி எடுத்­தது. இந்­நி­லை­யில், வெள்­ளத்­தால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து தப்­பித்து சிலர் தங்­கள் சொந்த ஊருக்­குப் பேருந்­தில் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது பேருந்து தீப்­பி­டித்­துக்­கொண்­டது. இம்­முறை தப்­பிக்க வழி­யில்­லா­மல் குறைந்­தது 18 பேர் உடல் கருகி மாண்­ட­னர். மாண்­ட­வர்­களில் 12 சிறு­வர்­களும் அடங்­கு­வர்.

கராச்­சி­யின் புற­ந­கர் பகு­தி­யில் இர­வு­நே­ரத்­தில் சென்­று­கொண்­டி­ருந்த அந்­தப் பேருந்­தில் திடீ­ரென்று தீ மூண்­ட­தாக பாகிஸ்­தா­னிய காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"பேருந்­தின் குளிர்­சா­த­னம் பழு­த­டைந்து தீப்­பி­டித்­துக்­கொண்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. உண்­மை­யான கார­ணம் கூடிய விரை­வில் உறு­திப்­

ப­டுத்­தப்­படும் என்று," காவல்­துறை கூறி­யது.