கராச்சி: பாகிஸ்தானை அண்மையில் வெள்ளம் புரட்டி எடுத்தது. இந்நிலையில், வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து தப்பித்து சிலர் தங்கள் சொந்த ஊருக்குப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்து தீப்பிடித்துக்கொண்டது. இம்முறை தப்பிக்க வழியில்லாமல் குறைந்தது 18 பேர் உடல் கருகி மாண்டனர். மாண்டவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவர்.
கராச்சியின் புறநகர் பகுதியில் இரவுநேரத்தில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தில் திடீரென்று தீ மூண்டதாக பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"பேருந்தின் குளிர்சாதனம் பழுதடைந்து தீப்பிடித்துக்கொண்டதாக அறியப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. உண்மையான காரணம் கூடிய விரைவில் உறுதிப்
படுத்தப்படும் என்று," காவல்துறை கூறியது.

