ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்கள் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
கிருமிப் பரவலைத் தடுக்கும் இலக்குடன் அந்நகரத்தில் சுகாதார அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த ஷாங்காய் மட்டுமன்றி மற்ற முக்கிய நகரங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஷாங்காயில் நேற்று முன்தினம் மேலும் 47 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
தலைநகர் பெய்ஜிங்கில் மேலும் 18 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
நாடு தழுவிய நிலையில் புதிதாக 1,406 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 1,709 பேர் கொவிட்-19 காரணமாக நோய்வாய்ப்பட்டதாக சீன
சுகாதாரத்துறை கூறியது.

