சிட்னி: இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா நகரைச் சேர்ந்த மாணவரை ஆஸ்திரேலியாவில் ஒருவர் 11 முறை கத்தியால் குத்தியிருக்கிறார். இது ஓர் இன ரீதியான தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் சிட்னி நகரின் லேன் கோவ் பகுதியில் நிகழ்ந்தது. குத்தப்பட்ட ஷுபம் கார்க் எனும் ஆடவருக்குத் தன்னைத் தாக்கியவரைத் தெரியாது. தாக்கியவர் ஓர் 27 வயது ஆடவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் ஷுபம் கார்கின் குடும்பத்தார் உதவி நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

