நொம் பென்: கம்போடியாவில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது எட்டு சிறுவர்கள் மாண்டனர். மேலும், மூன்று சிறுவர்களைக் காணவில்லை.
மாண்ட சிறுவர்கள் 12லிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆங்கிலப் பாடத்துக்குச் சென்ற சிறுவர்களை வீட்டுக்கு அழைத்து வந்துகொண்டிருந்தபோது படகு மெக்கோங் ஆற்றில் மூழ்கியதாகக் காவல்துறை கூறியது. அளவுக்கதிகமானோரை ஏற்றிச் சென்றதால் படகு மூழ்கியதாகக் காவல்துறை தெரிவித்தது. கண்டல் மாநிலத்தில் சென்றடையவிருக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் படகு மூழ்கியது.

