ஆஸ்திரேலிய வெள்ளத்தில் ஒருவர் மரணம்

ஆஸ்திரேலிய வெள்ளத்தில் ஒருவர் மரணம்

1 mins read
f201a5ff-54b4-4e5a-8007-9c40e85fd9f7
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஏற்­பட்ட மோச­மான வெள்­ளம் கார­ண­மாக ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

கன­மழை குறைந்து, நாட்­டின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் பெரும்­பா­லான இடங்­களில் வெள்­ளம் தணிந்து வரு­கிறது. மூன்று மாநி­லங்­களில் வெள்­ள­நீர் வீதி­க­ளை­யும் வீடு­க­ளை­யும் வாகனங்களையும் மூழ்­க­டித்­த­தைத் தொடர்ந்து, நூற்­றுக்­க­ணக்­கான வீட்டு உரி­மை­யா­ளர்­கள் துப்­பு­ர­வுப் பணி­யைத் தொடங்­கி­னர். மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­ட பகு­தி­களில் மெல்­பர்­னும் அடங்­கும்.

கடந்த ஈராண்­டு­க­ளாக கிழக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கன­மழை பெய்து வந்­துள்­ளது. இதற்கு 'லா நினா' வானிலை நிகழ்வே கார­ணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.