மாநிலத் தேர்தலை இப்போது நடத்த விரும்பாத பக்கத்தான் ஹரப்பான்

மாநிலத் தேர்தலை இப்போது நடத்த விரும்பாத பக்கத்தான் ஹரப்பான்

1 mins read
8ede21de-1f9c-4b19-81a5-6e7da1188466
-

கோலா­லம்­பூர்: தான் ஆட்சி புரி­யும் மூன்று பகு­தி­களில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தேர்தலை நடத்தும் மலே­சி­யா­வின் முக்­கிய எதிர்­த­ரப்­புக் கூட்­ட­ணி­யான பக்­கத்­தான் ஹரப்­பானின் முடிவில் மாற்றம் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வில் அடுத்த மாதம் பொதுத் தேர்­தல் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அத­னு­டன் சேர்த்து பினாங்­கில் மாநி­லத் தேர்­தலை நடத்­து­மாறு பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யில் இடம்­பெ­றும் 'டிஏபி' எனும் ஜன­நா­யக செயல் கட்சி கேட்­டுக்­கொண்­டது.

பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜன­நா­யக செயல் கட்­சி­யின் பிரி­வு­டன் கட்­சித் தலை­வர் லிம் குவான் எங்­கும் பக்­கத்­தான் ஹரப்­பா­னி­டம் அவ்வாறு கேட்­டுக்­கொண்­டார். எனி­னும், பக்­கத்­தான் ஹரப்­பா­னின் முடி­வில் மாற்­றம் இல்லை.

ஆண்­டி­று­தி­யில் ஏற்படக்கூடிய வெள்­ளத்தை சரி­யா­கக் கையா­ளா­மல் தான் ஆளும் சிலாங்­கூர், பினாங்கு, நெகிரி செம்­பி­லான் ஆகி­ய­வற்­றில் மாநி­லத் தேர்­தல் நடத்­தப்­படாது என்று பக்­கத்­தான் ஹரப்­பான் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தது. சென்ற ஆண்­டின் இறு­தி­யில் ஏற்­பட்ட வெள்­ளத்­தில் குறைந்­தது 54 பேர் மாண்­ட­னர். வெள்ளத்தால் மலே­சி­யா­விற்கு ஆறு பில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­புள்ள பொரு­ளி­யல் இழப்பும் ஏற்­பட்­டது.

கடந்த திங்கட்கிழமையன்று மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும். பொதுத் தேர்தலை நடத்த ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.