மலேசியாவின் பினாங்கு, பெர்லிஸ் மாநிலங்களில் திடீர் வெள்ளம்

மலேசியாவின் பினாங்கு, பெர்லிஸ் மாநிலங்களில் திடீர் வெள்ளம்

1 mins read
d13cf958-55b6-41b2-874b-4c75b1d13344
பினாங்கு ஆற்றில் நீரின் அளவு அபாய கட்டத்தைவிட 2.5 மீட்டர்அதிகமாக இருந்தது. படம்: 'தி ஸ்டார்' / 'ஏஷியா நியூஸ் நெட்வொர்க்' -

ஜார்ஜ்­ட­வுன்: மலே­சி­யா­வின் பினாங்கு தீவில் நேற்று முன்­தி­னம் இரவு ஒன்­பது மணி­யி­லி­ருந்து கன­மழை பொழிந்­தது. அத­னால் பினாங்கு ஆற்­றில் நீரின் அளவு அபாய கட்­டத்­திற்கு 2.5 மீட்­டர் அதி­க­மாக இருந்­தது.

அதைத் தொடர்ந்து நாரான் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் பல வீடு­க­ளுக்­குள் புகுந்­த­தாக பினாங்கு நலன், சுற்றுச்­சூ­ழல் குழு­வின் தலை­வர் ஃபீ பூன் போ தெரி­வித்­தார். எனி­னும், ஆகக் கடைசி நில­வ­ரப்­படி வெள்ள நீர் வடிந்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

பெர்­லிஸ் மாநி­லத்­தின் கங்­கார் நக­ரின் மூன்று பகு­தி­க­ளி­லும் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­ட­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. சென்­டுவா, செரி­யாப், பாக்­காவ் ஆகிய கிரா­மங்­கள் திடீர் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­கள் என்று பெர்­லிஸ் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேச்­சா­ளர் கூறி­னார்.