பேங்காக்: தாய்லாந்தின் தெற்கு மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்விடங்களில் இவ்வாரம் கூடுதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தின் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் நிலைமை மோசமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான புக்கெட் தீவில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அங்கு போக்கு
வரத்தும் சுற்றுப்பயணிகளை நம்பியிருக்கும் வர்த்தகங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை மீட்கும் பணியில் தாய்லாந்துக் கடற்படை அதிகாரிகள் இறங்கினர். வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 450,000 வீடுகள் பாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

