ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள விளையாட்டரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்றும் அது
தொடர்பாக மறுஆய்வு செய்யப்படும் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோவும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அந்நாட்டில் உள்ள விளையாட்டரங்கம் ஒன்றில் நிகழ்ந்த கூட்ட நெரிசலின் காரணத்தால் 130க்கும் அதிகமானோர் மாண்டனர்.
அத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க கூட்டுப் பணிக்குழு ஒன்றை அமைக்க இந்தோனீசியாவும் ஃபிஃபாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை இந்தோனீசியா ஏற்று நடத்த இருக்கிறது.
இதற்கிடையே, கூட்ட நெரிசல் காரணமாக 130க்கும் அதிகமானோர் மாண்ட விளையாட்டரங்கம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும் என்று அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார்.

