'பெர்சத்துவுடன் ஒத்துழைக்க முடியாது'

'பெர்சத்துவுடன் ஒத்துழைக்க முடியாது'

1 mins read
88e842c8-cea2-4391-aafc-f597f287ea2c
-

பெட்டா­லிங் ஜெயா: எல்லா விதத்­தி­லும் பெர்­சத்து கூட்­ட­ணி­யு­டன் ஒத்­து­ழைப்­பதை அம்னோ கட்சி நிரா­க­ரிப்­ப­தாக அக்­கட்­சி­யின் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி கூறி­யுள்­ளார். அம்னோ கட்சி, அது இடம்­பெ­றும் 'பாரி­சான் நேஷ­னல்' எனும் தேசிய முன்­னணி ஆகி­ய­வற்­றின் இடத்தை எடுக்க பெர்­சத்து அமைக்­கப்­பட்­டதே நிரா­க­ரிப்­புக்­குக் கார­ணம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"அம்­னோவை அதன் எதி­ரி­யு­டன் இணைந்து செயல்­பட வைப்­ப­தற்கு கார­ணம் எப்­படி இருக்­க­மு­டி­யும்?" என்று தேசிய முன்­ன­ணி­யின் தலை­வ­ரு­மான திரு ஸாஹிட் நேற்று ஃபேஸ்புக் பதி­வில் கூறி­னார். அர­சி­யல் ரீதி­யாக மற்ற கட்­சி­க­ளு­டன் ஒத்­து­ழைப்­பது குறித்து மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லுக்­குப் பிற­கு­தான் முடி­வெடுக்­கப்­படும் என்று தற்­போது இடைக்­கா­லப் பிர­த­ம­ரா­கப் பதவி வகிக்­கும் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் நேற்று முன்­தி­னம் சொன்னார்.

பெர்­சத்­து­வு­டன் ஒத்­து­ழைப்­பதை நிரா­க­ரிப்­பது மலாய் சமூ­கத்­தின் ஒற்­று­மையை அழித்­து­வி­டும் என்று சொல்­லப்­பட்­டதை திரு ஸாஹிட் மறுத்­தார்.

இதற்­கி­டையே, மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் ஆளும் தேசிய முன்­ன­ணியை எதிர்த்­துப் போட்­டி­யிட பாஸ் கட்சி முடி­வெ­டுத்­தது அந்­நாட்­டின் மலாய் இனத்­த­வ­ரின் வாக்­கு­களை மேலும் பிரிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது. அத­னால் தொங்கு நாடா­ளு­மன்­றம் உரு­வா­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

அம்­னோ­வுக்­கும் பெர்­சத்­து­வுக்­கும் இடையே நில­வும் பகை­யால் கூட்­டணி வைத்­துக்­கொள்ள இரண்­டில் ஒன்­றைத் தேர்ந்­தெ­டுக்­கும் நிலை பாஸ் கட்­சிக்கு ஏற்­பட்­டது. அதைத் தொடர்ந்து அக்­கட்சி பெர்­சத்­து­வைத் தேர்ந்­தெ­டுத்­தது.