ஜகார்த்தா: திரவ வடிவில் இருக்கும் எல்லா மருந்து வகைகளுக்கும் இந்தோனீசிய அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மருத்துவரின் அனுமதியுடன் மட்டும் வாங்கப்படும் மருந்து, சாதாரணமாகக் கடைகளில் விற்கப்படும் மருந்து ஆகிய இருவகை மருந்துகளுக்கும் தடை பொருந்தும்.
வழக்கத்துக்கு மாறாக இந்தோனீசியாவில் இவ்வாண்டு மோசமான சிறுநீர் பிரச்சினைக்கு ஆளான 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாண்டதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டில் இப்பிரச்சினைக்கு ஆளான சிறுவர்களில் பலர் ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகள்.

