இந்தோனீசிய பள்ளிவாசலில் தீ

இந்தோனீசிய பள்ளிவாசலில் தீ

1 mins read
10c89824-58b5-4927-a111-94e4febbc0f8
மாபெரும் பள்ளிவாசலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதை படம் காட்டுகிறது. படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் ஜகார்த்தா நக­ரில் உள்ள மாபெ­ரும் பள்­ளி­வா­ச­லில் தீ விபத்து ஏற்­பட்டு பெரிய கோபு­ரம் இடிந்து விழுந்­தது.

ஏஏ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அதிர்ச்­சி­யூட்­டும் காணொ­ளி­யில் கரும்­பு­கை­யு­டன் கோபு­ரம் சரிந்து விழு­வ­தைக் காண முடிந்தது.

பள்­ளி­வா­ச­லின் கீழ் இருந்த ஜகார்த்தா இஸ்­லா­மிய நிலை­ய­மும் தீ விபத்­தில் சேத­ம­டைந்­தது.

உயிர்ச்­சே­தம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை என்று காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

இஸ்­லா­மிய நிலைய வளா­கத்­தில் இடம்­பெற்று இருந்த பள்­ளி­வா­ச­லில் புதுப்­பிப்புப் பணி­கள் நடை ­பெற்று வந்­தன.

"பள்­ளி­வா­சலை தொடர்ந்து புதுப்­பிக்­கப்­ப­டு­வதை பற்றி ஆராய்ந்து வரு­கி­றோம். பள்­ளி­வா­சல் மீண்­டும் பயன்­ப­டுத்தப்படுவதே மிக முக்­கி­யம்," என்று ஜகார்த்­தா­வின் இடைக்­கால ஆளு­நர் ஹெரு புடி ஹர்­டோனோ தெரி­வித்­தார்.

பள்ளிவாசலில் மூண்ட தீயை அணைக்க பல மணி நேரமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபுரத்தில் ஊழியர்கள் புதுப் பிப்புப் பணிகள் மேற்கொண்டபோது தீ மூண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் தொடர்பில் நான்கு கட்டு மான ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.