மலேசிய தேர்தலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய ஆளும் தரப்பு கோரிக்கை

மலேசிய தேர்தலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய ஆளும் தரப்பு கோரிக்கை

1 mins read
4a6d86d5-2109-410f-a1a0-8a9db829b25d
மலே­சி­யா­வில் கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து 40 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள ஷா அலா­மின் தாமான் ஸ்ரீ முடா­வில் வெள்­ளம் கரை­பு­ரண்டு ஓடு­கிறது. மக்­கள் தங்­கள் உடை­மை­களை வெள்­ளத்­தில் இழுத்­துச் செல்­கின்­ற­னர். மலே­சிய வெள்­ளத்­தில் இது­வரை 17 பேர் மாண்­ட­னர். 70,000 பேர் பாது­காப்­பான இடத்­தில் குடி­ய­மர்த்­தப்பட்­டுள்­ள­னர். படம்: இபிஏ -

கோலா­லம்­பூர்: மலே­சிய பொதுத் தேர்­தல் நவம்­பர் 19ஆம் தேதி நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் தேர்­த­லுக்கு எதி­ரான வழக்கை தள்­ளு­படி செய்­யும்­படி அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், தேர்­தல் ஆணை­யம் மற்­றும் மலே­சிய அர­சாங்­கம் ஆகியவற்றை வழக்­க­றி­ஞ­ரும் முன்­னாள் நீதி­ப­தி­யு­மான சுல்­கி­ஃப்லி அஹ­மட் மஹி­னு­டின் பிர­தி­நி­திக்­கி­றார்.

மூன்று முறை கிள்­ளான் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ள சார்ல்ஸ் சான்­டி­யாகோ, முறைப்­படி நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டா­த­தால் தேர்­தலை நடத்த அனு­ம­திக்­கக் கூடாது என்று வழக்­குத் தொடுத்­துள்­ளார்.

ஜன­நா­ய­க செயல் கட்­சி­யின் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரான அவர், தேர்­தலை தேர்­தல் ஆணை­யம் ஒத்திவைக்க வேண்­டும் என்­று கோரிக்கை விடுத்­துள்­ளார்.

திரு இஸ்­மா­யி­லுக்கு அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­க­ளின் கருத்­தி­ணக்­கம் இல்லை.

இத­னால் அவர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தது அர­சி­யல் அமைப்­புக்கு முர­ணா­னது என்று சார்ல்ஸ் சான்­டி­யகோ கூறி­யுள்­­ளார். நவம்­ப­ரில் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் இருப்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் வெள்­ளத்­தில் கிள்­ளான் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டது. இதில் 54 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

ஆனால் நாடா­ளு­மன்­றத்தை கலைக்­கும் அதி­கா­ரம் மாமன்­ன­ருக்கே உண்டு என்­றும் நீதி­மன்­றத்­தின் நேரத்தை வீண­டிக்­கும் இந்த வழக்கை தள்­ளு­படி செய்ய வேண்­டும் என்­றும் அரசுத் தரப்பு கேட்­டுக்கொண்­டது.