கொவிட்-19 தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைக்க சீனா ஆலோசனை

கொவிட்-19 தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைக்க சீனா ஆலோசனை

2 mins read
163478df-4f74-4ce4-9a2e-dc4ba3a5019e
-

பெய்­ஜிங்: சீனா கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களைக் கடைப்­பி­டித்து வரு­கிறது. இதன் ஒரு பகு­தி­யாக தொற்­றால் பாதிக்­கப்பட்­ட­வர்­கள் கட்­டா­யத் தனி­மை­யில் வைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்த நட­வ­டிக்கை மற்ற நாடு­ க­ளி­டம் இருந்து சீனாவை பிரித்து வைத்­துள்­ளது. இவ்­வே­ளை­யில் தனி­மைப்­ப­டுத்­தும் காலத்தை குறைப்­பது குறித்து சீன உயர் அதி­கா­ரி­கள் விவா­தித்து வரு­கின்­ற­னர்.

வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் பயணிக­ளைத் தனி­மைப்­ப­டுத்­தும் காலத்தை ஹோட்­ட­லில் இரண்டு நாள்­க­ளா­க­வும் வீட்­டில் ஐந்து நாள் ­க­ளா­க­வும் மாற்­று­வது குறித்து அதி­கா­ரி­கள் தனிப்­பட்ட வகை­யில் பரி­சீ­லிக்­கின்­ற­னர் என்று அடை­யா­ளம் தெரி­விக்­காத அவ்­வட்­டா­ரத்­துக்கு நன்கு பரிச்­ச­ய­மான ஒரு­வர் தெரி­வித்­தார்.

தற்­போது சீனா­வுக்­குள் நுழை­ ப­வர்­கள் பத்து நாள்­கள் தனி­மைப் ­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். ஹோட்­ட­லில் ஏழு நாள்­களும் வீட்­டில் மூன்று நாள்­களும் தங்க வேண்­டும். வீட்­டில் தங்­கும்­போது வழக்­க­மான கொவிட்-19 பரி­சோ­தனை களை செய்ய வேண்­டும்.

ஆனால் புதிய கட்­டுப்­பா­டு­கள் குறித்து தெளி­வான விவ­ரம் இல்லை. வெளி­நாட்­டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் எப்­படி பொருந்­தும் என்­பது தெரி­ய­வில்லை.

இதற்­கி­டையே சீனா­வின் தலை­ ந­கர் பெய்­ஜிங்­கில் கொவிட்-19 பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக பொதுச் சுகா­தார சோத­னை­கள் தீவி­ர­மாக்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மை­யில் தொற்று நான்கு மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தால் சில குடி­யி­ருப்பு வளா­கங்­கள் மூடப்­பட்­டன.

கம்­யூ­னிசக் கட்சி மாநாடு தற்போது நடை­பெற்று வரு­வ­தால் தொற்­றுச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

சுமார் 21 மில்­லி­யன் மக்­கள் தொகை கொண்ட பெய்­ஜிங்­கில் புதன்­கி­ழமை அன்று மட்­டும் உள்­ளூ­ரில் பர­விய 18 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இவற்­று­டன் கடந்த பத்து நாள்­களில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 197க்கு அதி­க­ரித்­துள்­ளன.

அதா­வது இதற்கு முந்­தைய பத்து நாளில் கண்­ட­றி­யப்­பட்ட 49 தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பிடு­கை­யில் அது தற்போது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.