இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்துவது அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்துவது அதிகரிப்பு

1 mins read
018f8bc1-0e77-44e2-9411-7d9cf0df7752
-

கொழும்பு: இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்­குத் தங்­கம் கடத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது என்று இலங்கை சுங்­கத்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஒரு மாதத்­தில் இந்­தி­யர்­களும் இலங்­கை­யர்­களும் சம்­பந்­தப்­பட்ட எட்­டுத் தங்­கக் கடத்­தல் முயற்­சி­கள் இடம்­பெற்­ற­தாக இலங்­கைச் சுங்­கத்­து­றை­யின் பேச்­சா­ளர் சுதாத்த சில்வா கூறி­னார்.

இந்­தி­யத் தங்­கக் கடத்­தல்­கா­ரர்­களில் சிலர், இலங்கை வழி­யாக மற்ற நாடு­க­ளுக்கு அத­னைக் கடத்த முயல்­கின்­ற­னர் என்று திரு சில்வா கூறி­னார்.

தங்­கத்­தின் விலை­யும் அதற்­கான தேவை­யும் அதி­க­ரித்து வருவதே இதற்­குக் கார­ணம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

இத­னை­ய­டுத்து, தங்­கக் கடத்­த­லைத் தடுக்­கும் வகை­யில் இலங்­கைச் சுங்­கத்­துறை ஒழுங்கு நடை­மு­றை­களை வலுப்­ப­டுத்­தும் நட­வடிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது என்­றும் அவர் சொன்னார்.

கடத்­தல்­கா­ரர்­களில் சிலர், இலங்­கைக்­குள் தங்­கத்­தைக் கடத்தி வந்­த­பின் அதனை உருக்கி, தங்க பிஸ்­கட்­டு­க­ளாக மாற்­றி­வி­டு­வ­தாக காவல்­துறை துணைக் கண்­கா­ணிப்­பா­ள­ரும் ஊட­கத் தொடர்­பா­ள­ரு­மான நிகால் தல்டுவா கூறினார்.