'மலேசியாவில் ஆரோக்கியமான வேட்பாளர்கள் தேவை'

'மலேசியாவில் ஆரோக்கியமான வேட்பாளர்கள் தேவை'

2 mins read
fc28c726-baae-4248-89fc-73d1b947c739
மலேசியாவின் சென்ற பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியில் வாக்களிக்கத் திரண்ட மக்கள். கோப்புப் படம்: ஸ்டார் மீடியா குழுமம் -

பெட்­டா­லிங் ஜெயா: வரும் மலே­சியப் பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்ள கட்­சி­கள் ஆரோக்­கி­ய­மான வேட்­பா­ளர்­க­ளைக் கள­மி­றக்­கும் எண்­ணம் கொண்­டி­ருக்­க­லாம். அந்­நாட்­டின் வருங்­கால அர­சி­யல் தலை­வர்­கள் தங்­கள் தவ­ணைக்­காலம் நிறை­வ­டை­யும்­வரை பத­வி­யில் இருப்­பதை உறு­தி­செய்ய இது முக்­கி­யம் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

மலே­சி­யா­வின் சென்ற பொதுத் தேர்­தல் 2018ஆம் ஆண்டு நடை­பெற்­றது. அதி­லி­ருந்து நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களும் நான்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சுகா­தா­ரம் சார்ந்த கார­ணங்­களால் மாண்­ட­னர்.

2018ஆம் ஆண்­டில் சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள செரி செட்­டியா, சுங்கை காண்­டிஸ் ஆகிய தொகுதி­களில் இடைத்தேர்­தல் நடை­பெற்­றது. அத்­தொ­குதி­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் நோய்வாய்ப்பட்டு உயி­ரி­ழந்­தது அதற்­குக் காரணம்.

2019ஆம் ஆண்­டில் அதே மாநிலத்தின் செமென்யி தொகு­தி­யி­லும் இடைத்தேர்­தல் நடை­பெற்­றது. அதன் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இரு­தய வலி ஏற்­பட்டு உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து இடைத்தேர்­தல் நடத்­தப்­பட்­டது.

அதே ஆண்­டில் சாண்­டாக்­கான், தஞ்­சுங் பியாய் ஆகிய தொகுதி­களின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தேர்­தெ­டுப்­ப­தற்­கான இடைத்தேர்­தல் நடை­பெற்­றது. முன்னைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வர் மார­டைப்­பால் மாண்­டார், மற்­றொ­ரு­வர் இதய வலிக்­குப் பலி­யா­னார்.

2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் பத்து சாப்பி தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த லியூ வூய் கியோங், நியூ­மோ­னியா காய்க்­க­லுக்கு ஆளாகி மாண்­டார். சுமார் ஒரு மாதத்­திற்­குப் பிறகு கெரிக் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த ஹஸ்­புல்லா ஒஸ்­மா­னும் இ­தய வலிக்கு ஆளாகி உயி­ரி­ழந்­தார்.

எனி­னும், கொவிட்-19 கொள்ளை­நோய்ப் பர­வ­லால் அவ்விரு தொகு­தி­க­ளி­லும் இடைத்தேர்­தல் நடத்­தப்­ப­ட­வில்லை.

தேர்­த­லில் போட்­டி­யிட தற்­போ­தைக்கு சுகா­தார அம்­சங்­கள் கருத்­தில்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்று அர­சி­யல் விமர்­ச­கர் துங்கு மோஹார் முகம்­மது மொக்­தார் கூறி­னார். எனி­னும், வேட்­பா­ளர்­களைத் தேர்ந்­தெ­டுக்­கும்­போது அர­சி­யல் கட்­சி­கள் இதைக் கருத்­தில்­கொள்­ள­வேண்­டும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

பிரச்­சி­னை­யைக் கையாள அர­சி­யல் கட்­சி­கள் தங்­க­ளின் வேட்­பா­ளர்­களை அடிப்­படை சுகா­தா­ரப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வைக்­க­லாம் என்று மூத்த விரி­வு­ரை­யா­ள­ரான அஸ்­மில் முகம்மது டாயிப் பரிந்­து­ரைத்­தார். வேட்பாளர்களின் உடல்­ந­ல­னைக் கணிப்­பது தேர்­தல் ஆணை­யத்­தின் பொறுப்­பல்ல என்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.