'வகுப்பறை தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் அமைப்பினர் கொலை'

'வகுப்பறை தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் அமைப்பினர் கொலை'

1 mins read
d4e56f2d-5919-4cfe-ac7b-8b40712e24c1
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னில் கல்வி நிலை­யம் ஒன்­றில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லு­டன் தொடர்­பி­ருந்த ஆறு ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பி­ன­ரைத் தனது படை­கள் கொன்­று­விட்­ட­தாக தலி­பான் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

சென்ற மாதம் 30ஆம் தேதி­யன்று தற்­கொ­லைத் தாக்­கு­தல்­காரர் ஒரு­வர் தலை­ந­கர் காபூ­லில் உள்ள 'காஜ்' எனும் கல்வி நிலை­யத்­தில் பெண்­க­ளுக்கு அருகே வெடி­குண்­டைக் கொண்டு தற்­கொ­லைத் தாக்­கு­தல் நடத்­தி­னார். தாக்­கு­தல் மேற்­கொள்ளப்­பட்­ட­போது கல்வி மண்­ட­பத்­தில் பல்­க­லைக்கழ­க நுழை­வுத் தேர்­வு­களை நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்­கள் எழு­திக் கொண்­டி­ருந்­த­னர். அங்கு ஆண்­களும் பெண்­களும் பிரிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

தாக்­கு­த­லில் 46 பெண்­கள் உட்­பட குறைந்­தது 53 பேர் மாண்­ட­னர் என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

எந்த அமைப்­பும் தாக்­கு­த­லுக்­குப் பொறுப்­பேற்­க­வில்லை.

எனி­னும், 'காஜ்' கல்வி நிலை­யத் தாக்­கு­தல் உட்­பட பொது­மக்­க­ளுக்கு எதி­ரான பல தாக்­கு­தல்­களுக்கு ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பு­தான் கார­ணம் என்று தலி­பான் நேற்று கூறி­யது.