பைடனின் கல்விக் கடன் ரத்து திட்டம் நிறுத்தம்

பைடனின் கல்விக் கடன் ரத்து திட்டம் நிறுத்தம்

1 mins read
b5ce0673-b9bf-4143-9f00-230760460f27
-

வாஷிங்­டன்: கல்­விக்­கான கடனை மாண­வர்­கள் திருப்பிச் செலுத்தாமல் இருக்க வகை­செய்­யும் தாம் அறி­வித்த திட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 22 மில்­லி­யன் மாண­வர்­கள் சேர்ந்­து­கொண்­ட­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யி­ருந்­தார். எனினும், அதற்கு சில மணி­நே­ரத்­திற்­குப் பிறகு செயின்ட் லூயி­சில் உள்ள மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் ஒன்று­ திட்­டத்திற்குத் தற்­கா­லி­கத் தடை விதித்­தது.

குடி­ய­ர­சுக் சட்­சியின்­ ஆட்­சியில்­ இருக்­கும் ஆறு மாநி­லங்­கள் திட்­டத்­திற்கு எதி­ரா­கத் தடை உத்­த­ரவு கோரி மனுத் தாக்­கல் செய்­த­தைத் தொடர்ந்து இந்­நிலை உரு­வா­கி­ உள்ளது. அதன் தொடர்­பில் மேல்­முறை­யீட்டு நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்­கும் வரை திட்­டத்தைச் செயல்­படுத்­த­முடியாது.