ஈரான் ஆர்ப்பாட்டங்களுக்கு பெர்லினில் ஆதரவு

ஈரான் ஆர்ப்பாட்டங்களுக்கு பெர்லினில் ஆதரவு

1 mins read
4c939832-8af7-452d-9580-cfdb0306c2b1
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் பல்லாயிரக் கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். படம்: இபிஏ -

பெர்­லின்: ஈரா­னில் தொட­ரும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் ஜெர்­ம­னி­யின் தலை­ந­கர் பெர்­லி­னி­லும் பல்­லாயிரக்­க­ணக்­கா­னோர் பேர­ணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். நேற்று முன்தினம் சுமார் 80,000 பேர் இந்­ந­க­ரில் பேர­ணி­யில் கலந்­து­கொண்­ட­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரிவித்தனர்.

"பெண்­கள், வாழ்க்கை, சுதந்­தி­ரம்" என்ற வார்த்­தை­க­ளைக் கொண்ட பதா­கை­க­ளை­யும் ஈரான் கொடி­க­ளை­யும் ஏந்­தி­ய­படி பலர் பேர­ணி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

ஈரா­னில் 22 வயது குர்­தி­யப் பெண்­ணான மாஹ்சா அமினி அந்­நாட்­டின் நன்­ன­டத்­தைக் காவல்­துறை­யின் தடுப்­புக் காவ­லில் இருந்­த­போது மாண்­டார். அதைத் தொடர்ந்து ஆறா­வது வார­மாக அங்கு ஆர்ப்­பாட்­டங்­கள் தொடர்­கின்­றன.

சரி­யான முறை­யில் ஆடை அணி­யா­த­தால் அமினி தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. அதையடுத்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

இதற்­கி­டையே, ஈரா­னில் ஆர்ப்­பாட்­டங்­கள் இறுதி நாள்­களை நெருங்­கி­யுள்ளதாக அந்­நாட்­டின் துணை உள்­துறை அமைச்­சர் மஜித் மிராஹ்­மாடி நேற்று முன்­தி­னம் கூறினார்.

ஈரா­னில் ஆர்ப்­பாட்­டங்­களில் பலர் உயிரிழந்துவிட்டனர். மாண்டோரில் பெரும்­பா­லோர் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள், சிலர் பாது­காப்­புப் படை­யி­னர்.