நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயில் பெட்டியில் தனது ஆடை சிக்கித் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ஓர் இளம் ஆடவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகரின் உள்ளூர் 'சப்வே' ரயில் சேவைப் பாதையில் இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. மாண்ட ஆடவருக்கு வயது 20.
இச்சம்பவத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்பு நியூயார்க்கில் 'சப்வே' ரயிலுக்கு முன்னால் தள்ளிவிடப்பட்ட 32 வயது ஆடவர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 41 வயது சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சென்ற வாரமும் இத்தகைய ஒரு சம்பவத்தில் தள்ளிவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் காயமுற்றார்.
அண்மைக் காலமாக நியூயார்க் 'சப்வே' ரயில் பாதையில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

