2வது வீடாக பாலித் தீவு: இந்தோனீசியாவின் புதிய விசா பெற்று 10 ஆண்டுகள் வசிக்கலாம்

2வது வீடாக பாலித் தீவு: இந்தோனீசியாவின் புதிய விசா பெற்று 10 ஆண்டுகள் வசிக்கலாம்

2 mins read
88396fa5-59fb-4060-b80f-8288177f361a
-

பாலி: தென்கிழக்கு ஆசி­யா­வில் ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் சக்­தி­யாக விளங்­கும் இந்­தோ­னீ­சியா, உல­கப் பணக்­கா­ரர்­களை ஈர்க்­கும் போட்­டி­யில் இறங்­கி­யி­ருக்­கிறது.

அதற்கு பாலித் தீவை அது துருப்­புச் சீட்­டாகப் பயன்­ப­டுத்­து­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள ஏதா­வது ஒரு வங்­கி­யில் குறைந்­தது இரண்டு பில்­லி­யன் ருப்யா (S$180,800) முத­லீடு செய்­யும் தகுதிபெறும் சுற்­றுப்பய­ணி­கள் பாலியை இரண்­டா­வது வீடா­கக் கருதி ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை தங்­க­லாம் என்று இந்­தோ­னீ­சி­யா­ அறி­வித்­து உள்­ளது.

இந்தப் புதிய '2வது வீடு' விசா கிறிஸ்­மஸ் நாள் அல்­லது புதிய விதி­முறை வெளி­யி­டப்­பட்ட அறுபது நாள்க­ளுக்­குப் பிறகு நடை­மு­றைக்கு வரும்.

"இந்­தோ­னீ­சிய பொரு­ளி­ய­லில் குறிப்­பிட்ட வெளி­நாட்­ட­வர்­கள் ஆக்­க­க­ர­மான முறை­யில் பங்­களிப்­பதை இந்­தத் திட்­டம் ஊக்குவிக்­கிறது," என்று உல்­லா­சத் தீவான பாலி­யில் நடந்த நிகழ்ச்­சி­யில் பேசிய குடி­நு­ழைவுத் துறை இயக்கு­நர் விடோடோ எகாட்­ஜ­ஹ­ஜானா தெரி­வித்­தார்.

தொழில்­துறை நிபு­ணர்­கள், ஓய்வுபெற்­ற­வர்­கள், வசதி படைத்­த­வர்­கள் ஆகியோரை ஈர்க்க கோஸ்­டா­ரிக்கா முதல் மெக்­சிகோ வரை­யி­லான பல நாடு­கள் நீண்­ட­கால விசாவை அறி­வித்து வரு­கின்­றன. அந்தப் பட்­டி­ய­லில் இந்­தோ­னீ­சியாவும் சேர்ந்­துள்­ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிறகு எந்த இடத்­தி­லி­ருந்­தும் பணி­யாற்­ற­ முடியும் எனும் போக்கு அதி­க­ரித்து வரு­கிறது.

இதில் நன்கு படித்த உயர் தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் தாங்­கள் விரும்­பிய இடத்­தி­லி­ருந்து சுதந்­தி­ர­மாக பணி­யாற்­று­வ­தற்­காக பல நாடு­களில் குடி­யேறி வரு­கின்­ற­னர்.

இந்த வாய்ப்பை இந்­தோ­னீ­சியா உள்­ளிட்ட நாடு­கள் தங்­க­ளுக்கு சாத­க­மாக்­கிக்கொள்ள விரும்­பு­கின்­றன.

கடந்த 2021ல் மின்­னி­லக்க இடம்­பெ­ய­ரு­வோ­ருக்­கான விசாவை இந்­தோ­னீ­சியா அறி­வித்து இருந்தது.

நாட்­டின் முக்­கிய சுற்­று­லாத் தலமாக விளங்­கும் பாலித் தீவுக்கு விடு­மு­றை­யைக் கழிக்க விரும்­பும் அனைத்­து­லகப் பய­ணி­களை ஈர்ப்­பதே இதன் நோக்­க­மா­கும்.

இதன்மூலம் அந்­நிய செலா­வணி­யைப் பெருக்க முடி­யும் என நாடு­கள் நம்­பு­கின்­றன.

இந்­தோ­னீ­சி­யா­வுக்கு சுற்­றுலா பய­ணி­க­ளின் வருகை அதி­க­ரித்­து உள்ள வேளை­யில் 'பாலி 2வது வீடு' விசா அறி­விப்பு வெளி­யா­கி­ உள்­ளது.

மேலும், அடுத்த மாதம் பாலி­யில் ஜி20 மாநாடு நடை­பெ­று­வதால் கருடா இந்­தோ­னீ­சியா உள்ளிட்ட விமான நிறு­வ­னங்­கள் மீண்டும் அனைத்­து­லக சேவை­களை தொடங்­க­வி­ருக்­கின்­றன.

ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதனால் உலகின் பார்வை பாலித் தீவு பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.