சீனாவில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

சீனாவில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

1 mins read
606bfa17-9282-4989-9249-89c1b4dda78e
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் முடக்கநிலை அறிவிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு வெளியே முழுப் பாதுகாப்பு ஆடைகளை அணிந்த அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: சீனா­வில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

வூஹான் நக­ரி­லி­ருந்து நாட்­டின் வட­மேற்­கில் உள்ள சினிங் நகர் வரை உள்ள பல நக­ரங்­கள் அவற்­றின் கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரித்­துள்­ளன.

கட்­ட­டங்­களை மூடு­வது, மாவட்­டங்­களில் முடக்­க­நி­லையை அறி­விப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களில் நக­ரங்­கள் இறங்­கி­யுள்­ளன.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க சீனா மேற்­கொள்­ளும் இத்­த­கைய தீவிர நட­வ­டிக்­கை­க­ளால் பொது­மக்­க­ளுக்­குச் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது.

தொடர்ந்து மூன்று நாள்­க­ளாக சீனா­வில் புதி­தாக 1,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 அறவே இல்­லாத நிலையை அடைய இலக்கு கொண்­டுள்ள சீனா, பாதிப்பு அதி­க­ரிக்கும்­ போ­தெல்­லாம் கட்­டுப்­பா­டு

­க­ளை மேலும் கடுமையாக்குகிறது.

பொரு­ளி­யல் அடிப்­ப­டை­யில் சீனா­வின் நான்­கா­வது ஆகப் பெரிய நக­ர­மான குவாங்­சோ­வில் கூடு­தல் தெருக்­கள் மூடப்­பட்­டன.

குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 அபா­யம் அதி­கம் உள்ள இடங்­கள் எனக் கரு­தப்­படும் பகு­தி­களில், வீட்­டி­லேயே இருக்­கும்­படி மக்­க­ளுக்கு சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்­த­ர­வி­ட்டுள்ளனர்.

பல இடங்களில் பள்ளிகளும் பொழுதுபோக்கு மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.