தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பறவை விடுவிக்கப்பட்டது'

2 mins read
27a3353e-3835-484f-856d-8b0695490c3c
டுவிட்டர் தலைமை நிர்வாகியாக இருந்த பராக் அகர்வால் (இடது), டுவிட்டர் உரிமையாளரான எலன் மஸ்க். படங்கள்: ஏஎஃப்பி -

டுவிட்டர் உரிமையாளரானவுடன் உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தார் எலன் மஸ்க்

சான் ஃபிரான்­சிஸ்கோ: உல­கின் ஆகப்­பெ­ரிய பணக்­கா­ர­ரான எலன் மஸ்க், சமூக ஊடக நிறு­வ­ன­மான டுவிட்­டர் உரி­மை­யா­ள­ரா­கி­யதை வித்­தி­யா­ச­மான முறை­யில் தொடங்கி­யுள்­ளார்.

இவர் பொறுப்­பேற்ற உட­னேயே அந்­நி­று­வ­னத்­தின் உயர்­மட்ட நிர்­வா­கி­க­ளைப் பத­வி­யி­லி­ருந்து நீக்கி­னார். எனி­னும், தம் இலக்­கு­களை எவ்­வாறு எட்­டு­வோம் என்­பது பற்றி திரு மஸ்க் விவ­ரிக்­க­வில்லை.

டுவிட்­டரை US$44 பில்­லி­யனுக்கு (S$62 பி.) கைய­கப்­படுத்தி­ய­தைத் தொடர்ந்து, "பறவை விடு­விக்­கப்­பட்­டுள்­ளது" என்று திரு மஸ்க் டுவிட்­டர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார்.

டுவிட்­ட­ரில் எவை­யெல்­லாம் பதி­வேற்­றம் செய்­யப்­ப­ட­லாம் என்­பது குறித்த வரம்­பு­க­ளைக் குறைக்க இவர் விரும்­பு­கி­றார்.

என்­றா­லும், வெறுப்­பு­ணர்­வும் பிரி­வி­னை­வா­த­மும் டுவிட்­ட­ரில் மேலோங்­கு­வ­தைத் தவிர்க்க தாம் விரும்­பு­வ­தா­க­வும் இவர் குறிப்­பிட்­டார்.

வேலை­க­ளைக் குறைக்க தாம் திட்­டம் கொண்­டுள்­ள­தா­வும் திரு மஸ்க் கூறி­யி­ருப்­பது, டுவிட்­ட­ரின் ஏறக்குறைய 7,500 ஊழி­யர்­க­ளுக்கு எதிர்­கா­லம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்­ளது.

கூடு­தல் பணம் சம்­பா­திப்­ப­தற்­காக தாம் டுவிட்­டரை வாங்­க­வில்லை என்­றும் தாம் விரும்­பும் மனி­த­கு­லத்­திற்கு உத­வவே இந்த முடிவை எடுத்­துள்­ள­தா­க­வும் இவர் சொன்­னார்.

டுவிட்­டர் தலைமை நிர்­வாகி பராக் அகர்­வால், தலைமை நிதி அதி­காரி நெட் சேகல், சட்ட விவ­கா­ரம் மற்­றும் கொள்கை தலை­வர் விஜய கட்டே ஆகி­யோரை திரு மஸ்க் பணி­நீக்­கம் செய்­தார்.

டுவிட்­ட­ரில் போலிக் கணக்­கு­களின் எண்­ணிக்கை குறித்து தம்­மை­யும் டுவிட்­டர் முத­லீட்­டா­ளர்­க­ளை­யும் தவ­றாக வழி­ந­டத்­தி­ய­தாக திரு மஸ்க் அவர்­கள் மீது குற்­றம் ­சாட்­டி­னார்.

ஒப்­பந்­தம் இறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­போது திரு அகர்­வா­லும் திரு சேகலும் டுவிட்­ட­ரின் சான் ஃபிரான்­சிஸ்கோ தலை­மை­ய­கத்­தில் இருந்­தனர் என்­றும் பின்­னர் அவர்­கள் வழி­ய­னுப்பி வைக்­கப்­பட்­ட­னர் என்றும் இந்த விவ­கா­ரம் பற்றி அறிந்த சில கூறி­னர்.

டுவிட்­டரை கைய­கப்­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து அதன் தலைமை நிர்­வா­கி­யாக திரு மஸ்க் திட்­ட­மிட்டுள்­ளார்.

பய­னா­ளர்­க­ளுக்கு விதிக்­கப்­படும் நிரந்­த­ரத் தடையை நீக்­க­வும் இவர் விரும்­பு­கி­றார்.