இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம்: புட்டின்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம்: புட்டின்

1 mins read
793d3426-9218-4129-8ea2-110fc2195cc7
-

மாஸ்கோ: உக்­ரேன் மீது போர் தொடுத்து வரு­வ­தற்கு ரஷ்ய அதிபர் விளா­டி­மிர் புட்­டின் (படம்) வருத்­தம் தெரி­விக்­க­வில்லை. மாறாக, ரஷ்­யா­வின் 'சிறப்பு ராணுவ நட­வடிக்கை' அதன் இலக்­கு­களை எட்டி வரு­வ­தா­க­வும் உலக விவ­கா­ரங்­களில் மேற்­கத்­திய நாடு­க­ளின் ஆதிக்­கம் முடி­வுக்கு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

ரஷ்­யத் தலை­ந­கர் மாஸ்­கோ­வில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற வெளி­யு­ற­வுக் கொள்கை குறித்த கருத்­த­ரங்­கில் பங்­கேற்ற திரு புட்டி­னி­டம், கடந்த ஓராண்­டில் தமக்கு ஏமாற்­றம் எது­வும் ஏற்­பட்­டதா எனக் கேட்­கப்­பட்­டது. அதற்கு "இல்லை" எனப் பதி­ல­ளித்த அவர், உக்­ரே­னில் உயிர் நீத்த ரஷ்­யர்­க­ளைப் பற்றி தாம் எப்­போ­தும் சிந்­தப்­ப­தா­கக் கூறி­னார்.

"நாம் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தரு­ணத்­தில் உள்­ளோம். நமக்கு முன்­னால் இருப்­பது, இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு மிகவும் ஆபத்­தான, முன்­ன­றிந்து கூற­முடியாத, அதே­வே­ளை­யில் முக்கி­ய­மான கால­கட்­ட­மா­கும்," என்று திரு புட்­டின் எச்­ச­ரித்­தார்.

எட்டு மாதங்­க­ளுக்கு முன்பு உக்­ரேன் மீது ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கொல்­லப்­பட்­ட­தோடு மில்­லி­யன் கணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர். உலகப் பொரு­ளி­ய­லும் இத­னால் ஆட்டம் கண்­டுள்­ளது.

ரஷ்­யா­வின் இறை­யாண்­மை­யைப் பாது­காக்க அந்­நாடு அணு­வா­யு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்று திரு புட்­டி­னும் ரஷ்ய அதி­கா­ரி­களும் அண்மை வாரங்­க­ளாக பல­முறை கூறி வந்­துள்­ள­னர்.

உக்­ரே­னின் பல பகு­தி­க­ளைக் கைப்­பற்­றவே ரஷ்யா இந்த மிரட்­டல்­களை விடுக்­கிறது என்று மேற்­கத்­திய நாடு­கள் கரு­து­கின்­றன. இந்த நட­வ­டிக்கை சட்­ட­வி­ரோ­த­மா­னது என்­றும் சில நாடு­கள் கண்­டித்­து உள்­ளன.