பலமுனைப் போட்டியால் அம்னோவிற்கு ஆதாயம்

பலமுனைப் போட்டியால் அம்னோவிற்கு ஆதாயம்

2 mins read
3ce12080-0485-415b-9989-bd48e84f93eb
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அடுத்த சில வாரங்­களில் பொதுத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் எதிர்­க்கட்­சி­கள் பிள­வு­பட்டு நிற்­ப­தால் பெரும்­பா­லான தொகு­தி­களில் பலமுனைப் போட்டி நில­வும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், இந்தப் பலமுனைப் போட்டி, வலு­வான வாக்கு வங்கி கொண்­டுள்ள தேசிய முன்­னணி கூட்­ட­ணிக்கு ஆதா­ய­மாக அமை­யும் என்­றும் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

முன்­ன­தாக, அம்னோ அங்­கம் வகிக்­கும் தேசிய முன்­ன­ணியை வீழ்த்­தும் வகை­யில் அன்­வார் இப்­ரா­கிம் தலை­மை­யி­லான பக்­கத்­தான் ஹரப்­பான், முகை­தீன் யாசின் வழி­நடத்­தும் பெரிக்­கத்­தான் நே‌ஷ­னல், மகா­தீர் தலைமை வகிக்­கும் கிரக்­கான் தானா ஆயர் ஆகி­யவை பெருங்­கூட்­டணி அமைக்­கக்­கூ­டும் என்று மலே­சிய ஊட­கங்­கள் கூறி வந்­தன.

ஆனால், இந்த மூன்று கூட்­ட­ணி­க­ளுக்கு இடை­யே­யான கருத்து வேறு­பா­டு­கள் கார­ண­மாக எதிர்க்­கட்­சி­கள் கூட்­டணி அமை­வ­தில் எந்த முன்­னேற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை என்று கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

அம்­னோவை வீழ்த்­து­வ­தற்­காக வரும் தேர்­தலைப் பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யு­டன் ஒன்று சேர்ந்து எதிர்­கொள்ள மகா­தீர் தயா­ராக உள்­ள­தாக பெர்­னாமா செய்தி வெளி­யிட்­டுள்­ளது. ஆனால், மகா­தீ­ரைச் சந்­திக்க முகை­தீன் மறுத்து­விட்­டார்.

கெடா­வில் நடை­பெற்ற கிரக்­கான் தானா ஆயர் கூட்­ட­ணி­யின் பிர­சார கூட்­டத்­தில் பேசிய மகா­தீர், "எதிர்­க்கட்­சி­கள் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைத்­தால் மட்­டுமே அம்­னோவை வீழ்த்த முடி­யும்.

"மக்­க­ளுக்­கா­க­வும் நாட்­டிற்­கா­க­வும், முகை­தீ­ன் எனக்குச் செய்த துரோ­கத்தை மறந்து, அவ­ரு­டன் ஒத்­து­ழைக்க முன்வந்­தோம். ஆனால், அவர் அதை நிரா­க­ரித்து­விட்­டார்," என்­றார்.

எந்­த­வொரு கட்­சி­யின் துணை­யும் இல்­லா­ம­லேயே, வரும் தேர்­தலில் பெரிக்­கத்­தான் நே‌ஷ­னல் வென்­று­வி­டும் என்று முகை­தீன் யாசின் நம்­பு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

மகா­தீ­ரின் அழைப்பைப் பக்­கத்­தான் ஹரப்­பா­னும் நிரா­க­ரித்­து­விட்டது.

கிரக்­கான் தானா ஆயர் கட்­சி­யின் வேட்­பா­ளர் பட்­டி­யல் நவம்­பர் 2ஆம் தேதி வெளி­யி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பிகே­ஆர் கட்­சி­ வெளி­யிட்­டுள்ள வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் நடப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எட்டுப் பேருக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

கட்­சித் தலை­வர் அன்­வார் இப்ரா­கிம், தம்­புன் தொகு­தி­யில் போட்டி­யி­ட­வுள்­ளார்.