சீனாவின் உலக செல்வாக்கைப் பெருக்கும் இலக்குடன் பணியைத் தொடங்கிய அதிபர்

சீனாவின் உலக செல்வாக்கைப் பெருக்கும் இலக்குடன் பணியைத் தொடங்கிய அதிபர்

2 mins read
866263d3-814f-4e8f-9b5e-b88a32f3af71
-

பெய்­ஜிங்: சீன அதி­பர் ஸி ஜின்­பிங், தனது 3வது பத­விக்­கா­லத்­தைப் பர­ப­ரப்­பாக தொடங்­கி­னார். உலக அள­வில் சீனா­வின் செல்­வாக்கை மேம்­ப­டுத்­து­வதே தனது இலக்கு என்று அவர் சூளுரைத்துள்ளார்.

சீனா­வுக்­கு­ வ­ரும் நாள்களில் பல நாடுகளின் தலை­வர்­களும் வர இருக்­கி­றார்­கள். வியட்­னாம் கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தலை­வர் நியூ­யென் பு துரோங், நான்கு நாள்கள் பயணம் மேற்­கொண்டு நேற்று பெய்­ஜிங் வர இருந்­தார்.

இந்த ஆண்டு தொடக்­கத்­தில் நடந்த சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநாட்­டில் தன் போட்டியாளர்­களை எல்­லாம் வீழ்த்தி அதி­பர் ஸி தன் பத­வி­யைத் தக்­க­வைத்­துக் கொண்டார். அவர் சீனா­வின் அதி­ப­ராக தொடர்ந்து 3வது முறை­யாக பதவி ஏற்­றுள்­ளார்.

ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடக்­கும் அந்த மாநாட்­டில் பேசிய அதி­பர், சீனா­வின் செல்­வாக்கை அனைத்­து­லக அள­வில் உயர்த்­தப்­போ­வ­தாக சூளுரைத்­தார்.

பதவி ஏற்ற பிறகு முத­லா­வ­தாக வியட்­னாம் தலை­வ­ரைச் சந்­திக்­கும் அதி­பர் ஸி, பிறகு பாகிஸ்­தான் பிர­த­மர் ஷரிஃப், ஜெர்­மனி அதி­பர் ஒலாஃப் ஷோல்ஸ், தான்­சா­னியா அதி­பர் சாமியா சுலுஹு ஹாசன் அகி­யோ­ரு­டன் பேச்சு நடத்­து­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­பர் ஸி, அடுத்த மாதம் இந்­தோனீ­சியா, தாய்­லாந்து நாடு­களுக்குச் செல்­லும் வாய்ப்பு இருக்­கிறது. அந்த நாடு­களில் நடக்­கும் முக்­கிய உச்­ச­நிலை கூட்­டங்­களில் அமெ­ரிக்க அதி­பர் பைடன், ரஷ்ய அதி­பர் புட்­டின் உள்­ளிட்ட தலை­வர்­கள் கலந்­து­கொள்­கி­றார்­கள்.

இந்­தோ­னீ­சி­யா­வில் அடுத்த மாதம் ஜி20 உச்­ச­நிலை மாநாடு நடக்­கிறது. தாய்­லாந்­தில் ஆசிய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­துழைப்பு மாநாடு நவம்­பர் 18 மற்­றும் 19 ஆம் தேதி­களில் நடக்­கிறது.

அதி­பர் ஸி, 69, மத்­திய கிழக்கு நாடான சவூதி அரே­பி­யா­வுக்­கும் வருகை அளிக்க திட்­ட­மி­டு­வ­தாக சவூதி அரே­பிய வெளி­யு­றவு அமைச்­சர் கூறி­ய­தாக ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

சீனாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் கொரோனா முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஏறக்குறைய 1,000 நாள்கள் அதிபர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை.

கடந்த செப்டம்பரில் மத்திய ஆசியாவுக்குச் சென்று ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பிய அதிபர் ஸி, தனி மைப்படுத்திக்கொண்டார்.