கோலாலம்பூர்: 'ஏஏஎக்ஸ்' எனும் ஏர் ஏஷியா எக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து திரு டோனி ஃபெர்னாண்டஸ் விலகிக்கொண்டுள்ளார். இவ்வாண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதியன்று ஏர் ஏஷியா குழுமத்தின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு ஃபெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டார். வேறு பொறுப்புகள் தனக்கு இருந்ததால் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதாக திரு ஃபெர்னாண்டஸ் கூறினார் என்று சில தகவல்கள் வெளியாயின.
ஏர் ஏஷியாவின் நிர்வாகத் தலைவரான துங்கு மஹ்முத் ஃபாவ்ஸி, தாய்லாந்தின் ஏர் ஏஷியா பிரிவின் நிர்வாகக் குழுவில் இடம்பெறாத சுயேச்சை இயக்குநராக நியமிக்கப்படுவார் என்றும் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

