ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இடதுசாரித் தலைவரான அவர் தேர்தலுக்கு முன்பு பதவியில் இருந்த வலதுசாரித் தலைவர் ஜாயர் பொல்சொனாரோவை வென்றார். திரு லுலா 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
சென்ற பிரேசிலிய அதிபர் தேர்தலின்போது சிறையில் இருந்ததால் திரு லுலா போட்டியிடவில்லை. இந்த வெற்றி அவர் மீண்டு வந்ததற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

