நல்கே புயல்; குறைந்தது 101 பேர் மரணம்

நல்கே புயல்; குறைந்தது 101 பேர் மரணம்

1 mins read
c056a9bb-dbda-4fad-b2dc-5e40296c8847
பிலிப்பீன்சின் நொவலெட்டா பகுதியில் புயலால் ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி -

மணிலா: பிலிப்­பீன்­சில் நல்கே புய­லால் குறைந்­தது ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 101 பேர் மாண்­டு­விட்­ட­னர். இடி­பா­டு­களில் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டிய உடல்­களை மீட்­கும் பணி­கள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

மாண்­டோ­ரில் பாதி பேர் தென் பிலிப்­பீன்­சில் உள்ள பங்­சா­மோரோ வட்­டா­ரத்­தில் இருந்­த­வர்­கள். அந்த வட்­டா­ரத்­தில் 10 பேரைக் காண­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

புய­லால் ஏறக்­கு­றைய 69 பேர் காய­முற்­ற­தா­க­வும் பிலிப்­பீன்ஸ் பேரி­டர் அமைப்பு கூறி­யது. கடும் மழை­யா­லும் பலத்த காற்­றா­லும் உள்­கட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் சேதத்­தின் மதிப்பு 384 மில்­லி­யன் பெசோ (9.35 மில்­லி­யன் வெள்ளி) என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

மரண எண்­ணிக்கை குறித்து பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னேண்ட் மார்க்­கோஸ் ஜூனி­யர் அதிர்ச்சி தெரி­வித்­துள்­ளார். குறிப்­பாக பங்­சா­மு­ரோ­வில் இருக்­கும் மாகு­விண்­டா­னாவ் மாநி­லத்­தில் பதி­வான மரண எண்­ணிக்கை அவரை அதிர்ச்­சிக்கு ஆளாக்­கி­யது.

திரு மார்க்­கோஸ் ஜூனி­யர், புய­லால் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட சில பகு­தி­களில் சேதத்­தின் அளவை நேற்று உய­ரத்­தி­லி­ருந்து கணிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.