அன்வார்: கலாசார பேதமற்று ஒன்றுபட்டு முன்னேறுவோம்

2 mins read
16a47d69-6029-462f-ad0c-3a17198524f2
(இடமிருந்து வலம்) வில்ஃபிரெட் மதியூஸ் தங்காவ், ஆண்டனி லோக், அன்வார் இப்ராஹிம், முகமது சாபு, சையது சாதிக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கை வெளியீடு

கிள்­ளான்: மலே­சி­யா­வின் எதிர்த்­தரப்பு பக்கத்தான் ஹரப்­பான் கூட்­டணி எதிர்­வ­ரும் பொதுத் தேர்­த­லுக்­கான அதன் தேர்­தல் கொள்கை­ அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

கலா­சா­ரப் பன்­மு­கத்தை வலி­யு­றுத்­தும் வேளை­யில் வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிக்க மலே­சி­யர் அனை­வ­ருக்­கும் உதவி வழங்­கப்­படும் என்று அதில் உறு­தி­ அளிக்­கப்­பட்­டுள்­ளது. தன்னாட்சிச் சீன உயர்­நி­லைப் பள்­ளி­கள் வழங்­கும் உயர்கல்விச் சான்­றி­த­ழுக்கு அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­படும் என்­றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பக்கத்தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம், தாங்­கள் வெற்­றி­பெற்­றால் இரண்டு துணைப் பிர­த­மர்­கள் பொறுப்­பேற்­பர் என்­றும் அவர்­களில் ஒரு­வர் தீப­கற்ப மலே­சி­யா­வைச் சேர்ந்­த­வ­ரா­க­வும் மற்­ற­வர் நாட்­டின் கிழக்­குப் பகு­தி­யான சாபா அல்­லது சரவாக்கைச் சேர்ந்­த­வ­ரா­க­வும் இருப்­பார் என்றும் உறு­தி­கூ­றி­னார்.

கடந்த 30 மாதங்களாக ஆளும் தரப்பினால் பேரழிவுக்குள்ளான மலேசியாவைப் புனரமைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். தங்களை எதிர்த்துத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்போர் இனவாதத்தை ஆதரிக்கும் வேளையில் பக்கத்தான் ஹரப்பான் கலாசாரப் பன்முகத்தன்மையுடன் விளங்குவதாகத் திரு அன்வார் கூறினார்.

நிலை­யான நாடா­ளு­மன்ற ஆட்­சிக்­கா­லச் சட்­டத்தை அமல்­ப­டுத்­த­அவர் உறு­தி­ய­ளித்­தார். ஆளும் தரப்­பின் உட்­கட்­சிப் பூச­லால் நாடாளு­மன்­றமோ சட்­ட­மன்­றமோ அதன் தவ­ணைக்­கா­லம் முடி­யும் முன்­னரே கலைக்­கப்­ப­டு­வதை இது தடை­செய்­யும்.

தாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால், அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மூத்த அர­சாங்க அதி­கா­ரி­கள், அர­சாங்­கத் தொடர்­பு­டைய நிறு­வ­னங்­க­ளின் தலை­வர்­கள் ஆகி­யோ­ரின் சொத்து விவ­ரங்­களை வெளி­யி­டும் நட­வ­டிக்கை தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும் என்று திரு அன்­வார் உறு­தி­ய­ளித்­தார்.

மேற்­கூ­றிய அனை­வ­ரின் வாழ்க்­கைத் துணை உள்ளிட்ட 18 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­களுக்கும் இது பொருந்­தும் எனக் கூறப்­பட்­டது.