ஷாங்காய்: சீனாவில் 'ஃபாக்ஸ்கான்' நிறுவனத்தின் 'ஐஃபோன்' தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்திருக்கும் ஸெங்சோ பகுதியைச் சுற்றி ஏழு நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆகப் பெரிய 'ஐஃபோன்' தயாரிப்புத் தொழிற்சாலையான இது கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் 600,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 9ஆம் தேதி வரை முடக்கநிலை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது.

