சான் ஃபிரான்சிஸ்கோ: டுவிட்டர் நிறுவன ஊழியர்களில் யார் யார் வேலை நீக்கம் செய்யப்
படுவார்கள் என்ற விவரம் சிங்கப்பூர் நேரப்படி இன்று நள்ளிரவு முதல் தெரியவரும். இது
குறித்து அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வியாழக்
கிழமை மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
"டுவிட்டரை ஆரோக்கியமான வழியில் கொண்டுசெல்ல உலகளவிலான அதன் ஊழிய
ரணியைக் குறைக்கும் கடினமான நடைமுறையை வெள்ளிக்கிழமை (பசிபிக் நேரம்) செயல்
படுத்துகிறோம்," என்று குறிப்பிடப்பட்ட அந்த மின்னஞ்சலைக் கண்டதாக ராய்ட்டர்ஸ் கூறியது.
அதுவரை தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடி வைக்கவும் அலுவலகங்களுக்குள் நுழைவதற்கான அனுமதி யைத் தற்காலிகமாகத் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. ஊழியர்கள், டுவிட்டரின் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
டுவிட்டரின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனத்தின் ஊழியரணியைப் பாதியாகக் குறைக்க அதனை அண்மையில் வாங்கிய செல்வந்தரான எலான் மாஸ்க் திட்டமிடுகிறார். இந்த சமூக ஊடகத் தளத்தை அவர் US$44 பில்லியன் (S$62 பில்லியன்) கொடுத்து கடந்த மாதம் வாங்கினார்.
டுவிட்டர் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 7,500 பேர் பணியாற்றுவதாகவும் இவர்களில் சுமார் 3,700 பேரை ஆட்குறைப்பு செய்ய திரு மாஸ்க் திட்டமிடுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
யார் யார் வேலை இழப்பார் கள் என்ற தகவல் இன்று நள்ளி ரவில் வெளியாகும் என்பதால் பல ஊழியர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்.

