டுவிட்டர் ஆட்குறைப்பைத் தற்காத்துப் பேசும் மஸ்க்

டுவிட்டர் ஆட்குறைப்பைத் தற்காத்துப் பேசும் மஸ்க்

1 mins read
e43a7346-92ee-4731-b7ee-e8eab621eee3
-

சான் ஃபிரான்­சிஸ்கோ: டுவிட்­டர் நிறு­வ­னம் ஒரு நாளைக்கு நான்கு மில்­லி­யன் டால­ருக்­கும் (5.61 மில்­லி­யன் வெள்ளி) அதி­க­மான தொகையை இழந்து வந்­ததால் ஆட்­கு­றைப்பு செய்­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்று அதன் புதிய உரி­மை­யா­ளர் எலோன் மஸ்க் கூறி­யுள்­ளார். திரு மஸ்க் டுவிட்­டரை வாங்­கிய பிறகு அந்­நி­று­வ­னத்­தின் ஊழி­யர்­களில் பாதி பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

தாங்­கள் வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தைப் பற்றி டுவிட்டர் ஊழியர்கள் பலர் அதன் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, திரு மஸ்க் டுவிட்­டரை வாங்­கிய பிறகு அதில் இடம்­பெ­றும் கருத்­து­க­ளைச் சரி­பார்த்து வடி­கட்­டும் நட­வ­டிக்கை தளர்த்­தப்­ப­ட­லாம் என்ற கவ­லை­யும் எழுந்­தது. அது குறித்­துப் பேசிய அவர், இதன் தொடர்பில் நிறு­வ­னத்­தின் கொள்­கை­களில் மாற்­றம் ஏதும் இருக்காது என்று குறிப்­பிட்­டார்.

திரு மஸ்க் டுவிட்­டரை வாங்கி­ய­ பிறகு உல­க­ள­வில் ஆயிரக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர்.