தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

70 ஆண்டுகள் பிரிந்திருந்து 94வது வயதில் திருமணம் புரிந்தனர்

2 mins read
22a8fb10-615f-48cc-87bb-3ce88d15f4ec
எழுபது ஆண்டுகள் பிரிந்திருந்த பிறகு ஸு குவிச்சென்னும் (இடது) காவ் ஸென்வெய்யும் ஒன்றிணைந்து 94 வயதில் திருமணம் புரிந்தனர். படம்: சைனா டெய்லி -

ஷாங்­காய்: 1926ல் பிறந்த ஸு குவிச்­சென்­னும் காவ் ஸென்­வெய்­யும் 16 வய­தி­லி­ருந்தே நண்­பர்­கள். பிரிந்­து­போன இவர்­கள் 70 ஆண்டு­க­ளுக்­குப் பிறகு, ஒன்­றி­ணைந்து, 94வது வய­தில் திரு­மணம் செய்­து­கொண்­ட­னர்.

நெருங்­கிய நண்­பர்­க­ளாக இருந்த இவ்­வி­ரு­வ­ரின் தந்­தை­களும் சீனா­வின் ஷாண்­டோங் மாநி­லம், வெய்­ஹாய் பகு­தி­யில் புகைப்­ப­டக்­கூ­டத்­தை நடத்தி வந்­த­னர்.

தம்­மு­டைய மகளை திரு காவுக்கு திரு­ம­ணம் செய்­து­வைக்க ஆசைப்­பட்­டார் ஸுவின் தந்தை. ஆனால், திரு காவுக்கு ஏற்­கெ­னவே வேறொ­ரு­வ­ரு­டன் திரு­ம­ணம் நிச்­ச­ய­தார்த்­தம் செய்­யப்­பட்­டது. பின்­னர் இரு­வ­ரும் வெவ்­வேறு வழி­யில் சென்று தனித்­த­னியே குடும்­பத்தை அமைத்­துக்­கொண்­ட­னர்.

2019ல், ஸுவின் தம்­பியை சந்­தித்த திரு காவ், ஸுவை பற்றி கேட்­டார். ஸுவின் தம்­பி­யின் ஊக்­கு­விப்­பு­டன் ஸுவை தொடர்­பு­கொண்­டார் திரு காவ்.

ஸுவை அவர் சந்­தித்து, பழைய நினை­வு­க­ளைப் பற்­றிப் பேசி, புதிய நினை­வு­களை உரு­வாக்­கி­னர். இதி­லி­ருந்து இவர்­க­ளின் தொலைந்­து­போன காதல் தொலை­பேசி மூலம் மல­ர ஆரம்­பித்­தது.

70 ஆண்­டு­க­ளாக ஒரு­வ­ரை­ ஒரு­வர் பார்க்­கா­விட்­டா­லும், தங்­கள் இரு­வ­ருக்­கு­மி­டையே இருந்த தொடர்பு தொலை­யா­மல் இருந்­தது­போல் தாம் உணர்ந்­த­தாக திரு காவ் கூறி­னார். தனி­மை­யு­டன் இருக்­கும் தங்­க­ளுக்கு வாழ்க்­கைத் துணை தேவை என்­ப­தும் இந்த விதி எதிர்­பா­ராத ஒன்று என்­றும் திரு காவ் கூறி­னார்.

2020 செப்­டம்­ப­ரில் தங்­க­ளின் பிள்­ளை­க­ளின் ஆத­ர­வு­டன் திரு­ம­ணம் செய்­து­கொண்ட இவர்­கள், ஸுவின் முதி­யோர் இல்­லத்­தில் வாழ ஆரம்­பித்­த­னர்.

தங்­க­ளின் பிள்­ளை­களை தொந்­த­ரவு செய்­யா­மல், ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பாத்­துக்­கொள்­ள­லாம் என்று திரு காவ்­வி­டம் ஸு கூறி­னார்.

"நமது காதல் இளை­யர்­கள் காதல்­போல அல்ல, உன்னை காத­லிக்­கி­றேன் என்று சொல்ல தேவை இல்லை. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அன்பு காட்டி, பாத்­துக்­கொள்­வதே நமது காதல்," என்று திரு காவ்­வி­டம் ஸு கூறி­னார்.