'சுங்கை புலோ வேண்டுமென கைரிதான் கேட்டார்'

'சுங்கை புலோ வேண்டுமென கைரிதான் கேட்டார்'

1 mins read
7ab777e0-d7fd-4304-ac92-6cfac96c9d3c
-

பெட்­டா­லிங் ஜெயா: சுங்கை புலோ நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் தாம் போட்­டி­யிட விரும்­பு­வ­தாக மலே­சி­யா­வின் இடைக்­கால சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­த­தாக அம்னோ கட்­சி­யின் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி கூறி­யுள்­ளார்.

நேற்று தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் நடை­பெற்ற கூட்­டம் ஒன்­றில் இது­கு­றித்து அவர் பேசி­னார்.

இதற்கு முன்பு நடை­பெற்ற தேர்­தல்­களில் நெகிரி செம்­பி­லா­னில் உள்ள ரெம்­பாவ் தொகு­தி­யில்­தான் திரு கைரி போட்­டி­யிட்டு வென்­றார்.

ஆனால் இம்­முறை அந்­தத் தொகு­தி­யில் அம்­னோ­வின் துணைத் தலை­வர் முகம்­மது ஹசான் போட்­டி­யி­டு­கி­றார்.

சுங்கை புலோ­வின் மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­வது வழக்­கம்.

ஆனால் இம்­முறை சுங்கை புலோவை அம்னோ எடுத்­துக்­கொண்­டது. மஇகா­வுக்கு அதற்­குப் பதி­லாக கோலா லாங்­காட் தரப்­பட்­டுள்­ளது.

அதில் மஇகா­வின் மக­ளிர் அணித் தலை­வர் மோகனா முனி­யாண்டி போட்­டி­யி­டு­கி­றார்.

இதற்­கி­டையே, சுங்கை புலோ­வில் பிர­சா­ரம் செய்­வ­தில் கைரி தீவி­ரம் காட்டி வரு­கி­றார்.

எதிர்­கா­லத்­தில் மலே­சி­யப்

பிர­த­ம­ரா­வ­தற்­குத் தமக்கு விருப்­பம் இருப்­ப­தா­க­வும் அதற்கு முன்பு சுங்கை புலோ­வில் வென்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வேண்­டும் என அண்­மை­யில் தெரி­வித்­தார்.