வெள்ளத்தில் மூழ்கிய கிள்ளான் பள்ளத்தாக்கு

வெள்ளத்தில் மூழ்கிய கிள்ளான் பள்ளத்தாக்கு

3 mins read
8cc4362d-3116-4afe-887a-c078f566a911
வெள்ளத்தால் பல வாகனங்கள் பழுதடைந்தன. படம்: ராய்ட்டர்ஸ் -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லத்­தில் பல பகு­தி­களில் கனமழை கார­ண­மா­கத் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது.

வெள்­ளம் கார­ண­மாக இயல்­பு­வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் நிலைமை சற்று மோச­மாக இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சாலை­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­ய­தில் போக்­கு­வ­ரத்து வெகு

­வா­கப் பாதிக்­கப்­பட்­டது. கன­மழை தொட­ரும் என்று வானிலை மையம் முன்­னு­ரைத்­தி­ருப்­ப­தால் நிலைமை மோச­ம­டை­யக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது. கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் வெள்­ளத் தயார்­நிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மலே­சி­யப் பொதுத் தேர்­தல் நெருங்­கு­வ­தால் நாடு முழு­வ­தும் பிர­சா­ரக் கூட்­டங்­கள் சூடு­பி­டித்­துள்­ளன.

ஆனால் சிலாங்­கூரில் உள்ள நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் தங்­கள் பிர­சா­ரக்­ கூட்­டங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ள­னர். சுங்கை புலோ­வில் போட்­டி­யி­டும் இடைக்­கால சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன், வெள்­ளத்­தால் பாதிக்­கப்­ப­ட்டுள்ள கிரா­மம் ஒன்­றுக்­குச் சென்­றார். அங்கு முழங்­கால் அள­வி­லான வெள்ள நீரில் நடந்­து சென்று அங்­குள்ள மக்­க­ளைச் சந்­தித்து ஆறு­தல் கூறி­னார்.

அதே­போல பக்­கத்­தா­ன் ஹரப்­பான் வேட்­பா­ளர் ரம­ணன் ராம­

கி­ருஷ்­ண­னும் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்­குச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­தார்.

கொம்­பாக் தொகு­தி­யில் போட்டி­ யி­டும் சிலாங்­கூர் முதல்­வர் அமி­ரு­தீன் ஷாரி­யும் தமது தொகுதி உலா­வை­யும் பிர­சா­ரக் கூட்­டத்­தை­யும் ரத்து செய்து பெட்­டா­லிங்,

கிள்­ளான் ஆகிய மாவட்­டங்­களில் உள்ள துயர்­து­டைப்பு மையங்­க­ளுக்­குச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார்.

தேர்­த­லுக்கு இன்­னும் சில நாள்­களே எஞ்­சி­யுள்ள நிலை­யில், வெள்­ளம் மோச­ம­டை­வ­தால் வாக்­கா­ளர்­

க­ளால் வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்­குச் சென்று வாக்­க­ளிக்க முடி­யாது என்று எதிர்க்­கட்­சி­கள் கவ­லைப்­

ப­டு­கின்­றன. தற்­போது சிலாங்­கூ­ரைப் புரட்­டிப்­போ­டும் வெள்­ளம் அடுத்த சில நாள்­களில் மற்ற

மாநி­லங்­க­ளை­யும் உலுக்­கக்­கூ­டும் என்ற அச்சம் நிலவுகிறது. வாக்­கா­ளர் எண்­ணிக்கை குறைந்­தால் தேசிய முன்­ன­ணிக்கு அது சாத­க­மாக அமை­யக்­கூ­டும் என்று எதிர்க்­கட்­சி­கள் கூறு­கின்­றன.

உறுதி அளித்த சரவணன்

இந்நிலையில், தேர்தல் நாளன்று பேராக் மாநிலத்தின் தாப்பா தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் வாக்காளர்களை வாக்களிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்ல கிட்டத்தட்ட 1,000 வாகனங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதாக தேசிய முன்னணி சார்பாக அங்கு போட்டியிடும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் உறுதி அளித்துள்ளார்.

அன்­வார் குற்­றச்­சாட்டு

இது ஒரு­பு­றம் இருக்க, நிர்­ண­யிக்­கப்­பட்ட தேதிக்கு முன்­ன­தா­கவே மலே­சி­ய­ ரா­ணுவ அதி­கா­ரி­கள் வாக்­க­ளிக்­கத் தொடங்­கி­விட்­ட­தாக பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் குற்­றம் சாட்­டி­யுள்­ளார். இந்த முறை­கேடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும் என திரங்­கா­னு­வில் நடை­பெற்ற பிர­சா­ரக் கூட்­டத்­தில் திரு அன்­வார் கேட்டுக்கொண்டார்.

தேசிய முன்­ன­ணிக்கு மக்­கள் மத்­தி­யில் உள்ள ஆத­ரவு குறை­வாக இருப்­பதை உணர்ந்த இடைக்­கா­லப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இத்­த­கைய முறை­யற்ற உத்­தி­க­ளைக் கையாள்­வ­தாக திரு அன்­வார் சாடினார்.

"இஸ்­மா­யில் சப்ரி போட்­டி­யி­டும் பெரா தொகு­தி­யில் ராணுவ அதி­கா­ரி­கள் முன்­கூட்­டியே வாக்க­ளித் ­து­விட்­ட­னர். அவர்­க­ளுக்­குத் தலா 300 ரிங்­கிட் கொடுக்­கப்­பட்­டது. தேர்­தல் ஆணை­யம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்­றார் திரு அன்­வார்.

சொத்து விவ­ரங்­கள்

முடா கட்சி நிறு­வ­ன­ரும் ஜோகூரின் மூவார் தொகுதி வேட்­பா­ள­ரு­மான 29 வயது சயீது சாதிக் சயீது ரஹ்­மான் தமது சொத்து விவ­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளார். தமது சொத்து மதிப்பு கிட்­டத்தட்ட 1.91 மில்­லி­யன் ரிங்­கிட் ($570,000) என்று அவர் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன் சேர்த்து தமது பழைய மிதி­வண்­டி­யை­யும் இரண்டு பூனை­

க­ளை­யும் அவர் சொத்­துப் பட்­டி­ய­லில் சேர்த்­துக்­கொண்­டார்.

கருத்­துக்­க­ணிப்பு

இதற்­கி­டையே, பக்­க­த்தான் ஹரப்­பான் ஆட்­சிக்கு வர வேண்­டும் என்று கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு மலே­சி­யர் விரும்­பு­வ­தாக மெர்­டேக்கா சென்­டர் நடத்­திய கருத்துக்­ க­ணிப்­பில் தெரி­ய­வந்­துள்­ளது.

அடுத்த பிர­த­ம­ராக அன்­வார் இப்­ரா­ஹிம் பதவி வகிக்க வேண்­டும் என்று கருத்­துக்­க­ணிப்­பில் பங்­கேற்­ற­வர்­களில் பலர் விரும்­பு ­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மலாய்க்­கா­ரர்­களில் 35 விழுக்­காட்­டி­னர் பெரிக்­காத்­தான் நேஷ­னல் ஆட்­சிக்கு வர வேண்­டும் என்று விரும்­பு­வ­தாக கருத்­துக்­

க­ணிப்பு தெரி­வித்­தது.