மலேசியாவில் மழை, வெள்ளம்; அரசாங்கத்தின்மீது மக்கள் கோபம்

மலேசியாவில் மழை, வெள்ளம்; அரசாங்கத்தின்மீது மக்கள் கோபம்

2 mins read
fda4b5d1-270b-417d-8c6b-58bc02c4794b
சிலாங்கூரின் கிள்ளான் பகுதியில் உள்ள தமது கடையை சூழ்ந்துள்ள வெள்ளத்திற்கு மத்தியில் செய்வதறியாமல் நிற்கும் பெண். வரும் 19ஆம் தேதி மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல பகுதிகளில் 17ஆம் தேதி வரை மழை தொடர்ந்து பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.படம்: இபிஏ -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் வட­கி­ழக்கு பருவ மழை பெய்­யத் தொடங்­கி­யுள்­ள­தை­ய­டுத்து, நாட்­டின் பல்­வேறு மாநி­லங்­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. வெள்­ளம் ‌சூழ்ந்த பகு­தி­களில் இருந்து மீட்­கப்­பட்ட பலர் தற்­கா­லிக நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மலே­சி­யா­வில் இன்னும் ஏழு நாள்களில் பொதுத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், தற்­போ­தைய மழை­யும் வெள்­ள­மும் அர­சாங்­கம் மீதான மக்­க­ளின் கோபத்தை மீண்­டும் தூண்­டி­யுள்­ளது.

பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் வரை கால அவ­கா­சம் உள்ள நிலை­யில், பருவ மழை காலத்­தில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்­தின் முடிவு குறித்து மலே­சிய மக்­கள் கோப­ம­டைந்­துள்­ள­னர்.

பல பொதுத் தேர்­தல் வேட்­பா­ளர்­கள் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக தங்­கள் பிரச்­சார நட­வ­டிக்­கை­களை நிறுத்தி வைத்­துள்­ள­னர்.

மிக­வும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள சிலாங்­கூர் மாநி­லத்­தில் மட்­டும் கிட்­டத்­தட்ட 720 பேர் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யேறி நிவா­ரண முகாம்­களில் தங்­கி­யுள்­ள­னர்.

பாரி­சான் நே‌ஷ­னல் கட்­சி­யின் ஹுலு லங்­காட் நாடா­ளு­மன்றத் தொகுதி வேட்­பா­ள­ரான ஜோஹன் அப் அஜிஸ், வெள்­ளத்­தில் சிக்­கி­உள்­ள­வர்­களை மீட்­ப­தற்­காக தாம் 15 பட­கு­க­ளைத் தயார் நிலை­யில் வைத்­தி­ருப்­ப­தாக சொன்­னார்.

கெடா­வில் உள்ள ஆறு நிவா­ரண மையங்­களில் கிட்­டத்­தட்ட 240 பேர் தஞ்­சம் புகுந்­துள்­ள­னர். பினாங்­கில் கிட்­டத்­தட்ட 120 பேர் நிவா­ரண மையங்­களில் தங்­கி­யுள்­ள­னர்.

வெள்­ள நிவா­ர­ணத் திட்­டங்­க­ளுக்­காக மாநில அரசு கடந்த பத்­தாண்­டு­களில் 300 மில்­லி­யன் ரிங்­கிட் (S$89 மில்­லி­யன்) செல­விட்­டுள்­ள­தாக அதன் முதல்­வர் சௌ கோன் இயோவ் சொன்­னார்.

இந்­நி­லை­யில், வரும் 17ஆம் தேதி வரை பல பகு­தி­களில் இடி­யு­டன் கூடிய தொடர் மழை பெய்­யும் என்று மலே­சிய வானிலை மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

சிலாங்­கூர், பாஹாங், கெடா, பினாங்கு, நெகிரி செம்­பி­லான், ஜோகூர், திரங்­கானு, கிளந்­தான் ஆகிய பகு­தி­களில் கன­மழை பெய்­யும் என்று எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அது சொன்­னது.

மலே­சி­யா­வில் சென்ற ஆண்டு இது­வரை காணாத வகையில் மோச­மான வெள்­ளப் பெருக்­கிற்கு

54 பேர் மாண்­டு­விட்­ட­னர். கிட்­டத்­தட்ட 6.5 பில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­பி­லான சேதம் ஏற்­பட்­டது.