ஆக அதிகமான சுயேச்சை வேட்பாளர்கள்

ஆக அதிகமான சுயேச்சை வேட்பாளர்கள்

1 mins read
080f3872-1f1c-40ed-9cca-068af14b05f1
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில் இது­வரை இல்­லாத அள­வுக்கு 108 சுயேச்சை வேட்­பா­ளர்­கள் போட்டி­யி­டு­கின்­ற­னர்.

கடந்த சில ஆண்­டு­களாக நாட்­டின் முக்­கிய கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான பூசல், அர­சி­யல் நிலை­யற்ற தன்­மைக்கு வழி­வ­குத்­தது பற்றி வாக்­கா­ளர்­க­ளி­டையே நில­வும் அதி­ருப்­தியை இது வெளிப்­ப­டுத்­து­வ­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

மேலும் கட்­சி­யின் புதிய உறுப்­பி­னர்­கள், கட்­சித் தாவி­ய­வர்­களை சில கட்­சி­யின் தலை­வர்­கள் வேட்­பா­ளர்­க­ளாக அறி­வித்­த­தால், அதி­ருப்தி அடைந்­த­வர்­களும் சுயேச்­சை­யாக போட்­டி­யிட முடிவு செய்­துள்­ள­னர்.

"இது அர­சி­யல் விழிப்­பு­ணர்­வின் அறி­குறி. நமது ஜன­நா­ய­கம் இப்­போது மிக­வும் வலு­வா­க­வும் ஆற்­றல் மிக்­க­தா­க­வும் உள்­ளது. மேலும் மக்­க­ளுக்கு முன்­னெப்­போ­தை­யும் விட அதி­க­மான தேர்­வு­கள் உள்­ளன," என்­றார் அரசியல் ஆய்வு நிறு­வ­னம் ஒன்­றின் மூத்த அதி­கா­ரி­யான அரின் நஜ்வா.

மலே­சி­யா­வின் அர­சி­யல் நிலை­யற்­ற­தன்மை கார­ண­மாக, சென்ற 2020ஆம் ஆண்­டில் பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்­சிக் கவிழ்ந்­தது.

மலே­சி­யா­வின் பத்து நாடாளு­மன்றத் தொகு­தி­யில் 10 பேர் வேட்­பா­ளர்­கள் களத்­தில் உள்­ள­னர். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஆக அதி­க­மான வேட்­பா­ளர்­களைக் கொண்ட பகு­தி­யாக இது இருக்­கக்­கூ­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

2020 மாநி­லத் தேர்­த­லின் போது சாபா­வில் உள்ள பெங்­கோ­கா­வின் தொகு­தி­யில் 11 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யிட்­ட­னர்.