கோலாலம்பூர்: மலேசிய சுகாதார துறை அமைச்சரும் பாரிசான் நேஷனல் கூட்டணியின் சுங்கை புலோ தொகுதியின் வேட்பாளருமான கைரி ஜமாலுதின், வரும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அம்னோவைச் சீர்படுத்தப் போவதாகவும் பாரிசான் நேஷனலில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகவும் சொன்னார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டை உயர்நிலைக்கு கொண்டு செல்வேன் என்றும் பிரச்சாரத்தின்போது அவர் சொன்னார்.

