ஸெலன்ஸ்கி: ரஷ்யா போர்க் குற்றங்கள் புரிந்தது

ஸெலன்ஸ்கி: ரஷ்யா போர்க் குற்றங்கள் புரிந்தது

2 mins read
37ee69dc-30b5-43ff-9787-2d13342329cc
-

கெர்­சன்: உக்­ரே­னில் ரஷ்ய ராணுவ வீரர்­கள் போர்க் குற்­றங்­கள் புரிந்­த­தா­க­வும், பொது மக்­க­ளைக் கொன்­ற­தா­க­வும் உக்­ரே­னிய அதி­பர் வொலொ­டி­மிர் ஸெலன்ஸ்கி

குற்­றம் சாட்­டி­யுள்­ளாார்.

அந்­ந­க­ரில் 400க்கும் மேற்­பட்ட போர்க் குற்­றங்­கள் புரி­யப்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­கள் இருப்­ப­தாக திரு ஸெலன்ஸ்கி தெரி­வித்­தார். பொது­மக்­கள், ராணுவ வீரர்­கள் ஆகி­யோ­ரின் சட­லங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

ரஷ்­யப் படை­கள் உக்­ரே­னின் மற்ற பகு­தி­களில் புரிந்த வன்­செ­யல்­களை கெர்­சன் மாநி­லத்­தி­லும் செய்­தி­ருப்­ப­தாக திரு ஸெலன்ஸ்கி தனது அன்­றாட காணொளி உரை­யில் கூறி­னார். திரு ஸெலன்ஸ்கி முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­களை ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தால் உட­ன­டி­யாக உறு­திப்­ப­டுத்த இய­ல­வில்லை.

பொது மக்­க­ளைக் குறி­வைத்து தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதை ரஷ்யா மறுத்­துள்­ளது.

கெர்­சன் மாநி­லத்­தி­லி­ருந்து ரஷ்­யப் படை­கள் வெளி­யா­ன­தைத் தொடர்ந்து, மாநி­லத்­தின் சில பகுதி ­களை உக்­ரே­னிய ராணு­வம் மீண்­டும் ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று கைப்­பற்­றி­யது. பாதிக்­கப்­பட்ட முக்­கி­யக் கட்­ட­மைப்­பு­கள் பழு­து­பார்க்­கப்­பட்டு வரு­கின்­றன. பல வீடு­களில் மின்­சா­ரம், குடி­நீர் வச­தி­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­காரி­ கள் கூறி­னர். அங்கு மனி­தா­பி­மான நிலைமை மிக மோச­மாக இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. பொது­மக்­கள் பலர் ரஷ்­யப் படை­க­ளால் துன்

­பு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் அதி­காரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

இரு­நா­டு­க­ளுக்கு இடையே போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ரஷ்­யப் படை­கள் கைப்­பற்­றிய ஒரே மாவட்ட தலை­ந­க­ரம் கெர்­சன். அந்­ந­கரை ரஷ்­யப் படை­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைவிட்­ட­தைத் தொடர்ந்து, அந்த நக­ரம் மீண்­டும் உக்­ரேன் வச­மா­னது. அதைக் கொண்­டாட அந்­ந­கர மக்­கள் உக்­ரே­னிய கொடி­களை அசைத்து உக்­ரே­னிய படை­களை நக­ருக்­குள் வர­வேற்­ற­னர்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக கெர்­சன் நக­ரில் ஊர­டங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.