இஸ்தான்புல் தாக்குதல்; குர்திய அமைப்பு மீது சந்தேகம்

இஸ்தான்புல் தாக்குதல்; குர்திய அமைப்பு மீது சந்தேகம்

1 mins read
6827f988-0ea7-40f7-b2c2-1d85797cbf7c
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் விசாரணை நடத்திய துருக்கிய அதிகாரிகள். தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர்; பலர் காயம் அடைந்தனர்.படம்: ஏஎஃப்பி -

இஸ்­தான்­புல்: துருக்­கி­யின் இஸ்­தான்­புல் நக­ரில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற வெடி­குண்டு தாக்­கு­த­லில் குறைந்­தது ஆறு பேர் மாண்­ட­னர்; கிட்­டத்­தட்ட 81 பேர் காய­முற்­ற­னர். கூட்­டம் அதி­க­முள்ள இஸ்­தான்­பு­லின் மத்­தி­யப் பகு­தி­யில் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக துருக்­கிய அதி­கா­ரி­கள் கூறி­னர். பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்­குக் கார­ண­மா­னோர் தண்­டிக்­கப்­ப­டு­வர் என்று துருக்கி அதி­பர் ரிசெப் தயிப் எர்­டோ­வான் தெரி­வித்­தார்.

தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வ­ரைக் கைது செய்­து­விட்­ட­தாக துருக்­கி­யின் உள்­நாட்டுத் துறை அமைச்­சர் தெரி­வித்­தார். தாக்­கு­த­லுக்கு முன்பு அந்த இடத்­தில் இருந்த இருக்­கை­யில் பெண் ஒரு­வர் 40 நிமி­டங்­க­ளுக்­கும் அதி­க­ நேரம் அமர்ந்­

தி­ருந்­தி­ருந்­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். அவர் அந்த இடத்­தை­விட்டு புறப்­பட்­ட­தும் வெடி­குண்டு வெடித்­தது. இதற்­கி­டையே, குர்­திஸ்­தான் பிரி­வி­னை­வாத அமைப்­பான பிகேகே இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக துருக்கி குற்­றம் சாட்­டு­கிறது. இருப்­பி­னும், தாக்­கு­த­லுக்கு இது­வரை யாரும் பொறுப்­பேற்­க­வில்லை. இஸ்­தான்­பு­லின் மையப் பகு­தி­யின் நிகழ்ந்த இந்­தத் தாக்­கு­த­லால் துருக்­கி­யர்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர். இந்­தத் தாக்­கு­

த­லுக்­குச் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.